Published : 21 Aug 2025 06:13 AM
Last Updated : 21 Aug 2025 06:13 AM

மதுரை: தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து வாகனம் சேதம்

மதுரையில் தவெக மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சேதமடைந்த கார்.

மதுரை: தவெக மாநில மாநாடு நடை​பெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்​கம்​பத்தை நேற்று அமைக்க முயற்​சித்​த​போது எடை தாங்காமல் சரிந்து விழுந்​தது. அரு​கில் இருந்​தவர்​கள் விலகி ஓடிய​தால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர்.

மதுரை அரு​கே பாரப்பத்​தி​யில் தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. கட்​சித் தலை​வர் விஜய் கொடியை ஏற்​று​வதற்​காக 100 அடி உயர கொடிக் கம்​பத்தை மேடை அருகே அமைக்​கத் திட்​ட​மிட்​டு, ஆழமான குழிதோண்டி கான்​கிரீட் அமைப்பை ஏற்​படுத்தும் பணி நடை​பெற்​றது.

நேற்று அதன் மீது ஒரு டன் எடை கொண்ட கொடிக்​கம்​பத்தை பொருத்​தும் பணி தொடங்கியது. கிரேன் உதவி​யுடன் கம்​பத்தை தூக்கி நிறுத்​தும் பணி நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது, திடீரென சரிந்து விழுந்​தது. உடனே அப்​பகு​தியில் நின்​று​கொண்​டிருந்​தவர்​கள் உடனடி​யாக விலகி ஓடிய​தால், அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். வேக​மாக சரிந்த கம்​பம், அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆளில்​லாத கார் மீது விழுந்​தது. இதில் காரின் மேற்​பகுதி சேதமடைந்​தது.

தகவலறிந்து உடனடி​யாக வந்த போலீ​ஸார், இதுகுறித்து விசா​ரணை நடத்​தினர். கொடிக்​கம்​பத்தை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தும்​படி அறி​வுறுத்​தினர். இதையடுத்து கொடிக்​கம்​பம் அகற்​றப்​பட்​டது. இன்று மாநாடு நடை​பெற உள்ள நிலை​யில், வேறொரு கொடிக் கம்​பத்தை அமைப்​பது தொடர்​பாக கட்சி நிர்​வாகி​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “மா​நாடு முடிவடைந்த பிறகும், அதே இடத்​தில் 100 அடி கொடிக் கம்​பத்​தில் கட்​சிக் கொடியை 5 ஆண்​டு​களுக்கு பறக்​க​விட நிர்​வாகி​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதற்​காக அந்த நிலத்​தின்உரிமை​யாளரிடம் ஒப்​பந்​தம் மேற்​கொள்ள முயற்​சித்​துள்​ளனர். இதில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

கடந்த 2 நாட்​களுக்கு முன்பு உடன்​ பாடு ஏற்​பட்​டதைத் தொடர்ந்து அவசர அவசர​மாக கொடிக் கம்​பத்தை அமைக்​கும் பணியை மேற்​கொண்​டுள்​ளனர். அதிக எடை தாங்​காமல் கம்​பம் சரிந்து விழுந்​த​தாகத் தெரி​கிறது. தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம்’ என்று கூறினர்.

தொண்டர்கள் குவிந்தனர்: இதற்கிடையே, மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மாநாடு பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கி இரவு 8 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கட்சிக் கொடி ஏற்றுதல், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றுதல், விஜய் உரை, நன்றியுரை என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஜய் மதுரை வருகை: மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய், மதுரைக்கு நேற்று மாலை காரில் வந்தார். பின்னர் ஓட்டலில் தங்கிய அவர், கட்சி நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தினார்.

பிளக்ஸ் பேனர் வைத்த கல்​லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயி​ரிழப்பு: விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூர் அருகே இனாம் கரிசல்​குளத்​தைச் சேர்ந்​தவர் காளியப்​பன் மகன் காளீஸ்​வரன் (19). இவர், ஸ்ரீவில்​லிபுத்​தூர் அருகே கிருஷ்ணன்​ கோ​விலில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் விஸ்​காம் 3-ம் ஆண்டு படித்து வந்​தார்.

காளீஸ்வரன்

விஜய் ரசிக​ரான காளீஸ்​வரன், மாநில மாநாட்​டுக்​கான பிளக்ஸ் பேனர் வைக்க தனது நண்​பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்​கச் சென்​றுள்​ளார். நேற்று முன்​தினம் இரவு பேருந்து நிறுத்​தம் அருகே உள்ள கடை​யில் இருந்து இரும்​புக் கம்​பியை எடுத்து வந்​த​போது, உயர் அழுத்த மின் கம்​பி​யில் இரும்​புக் கம்பி உரசி​ய​தில் மின்​சா​ரம் பாய்ந்து காளீஸ்​வரன் தூக்கி வீசப்​பட்​டார்.

அங்​கிருந்​தவர்​கள் அவரை மீட்டு ஸ்ரீவில்​லிபுத்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், காளீஸ்​வரன் ஏற்​கெனவே உயி​ரிழந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து வன்​னி​யம்பட்​டி போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x