Published : 20 Aug 2025 05:32 AM
Last Updated : 20 Aug 2025 05:32 AM

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.2442 கோடி ஒதுக்கீடு

சென்னை: கோ​யம்​பேடு - பட்​டாபி​ராம் இடையே மெட்ரோ ரயில் வழித்​தடம் அமைக்க, நிலம் கையகப்​படுத்​தல் உட்பட பல்​வேறு பணி​களைத் தொடங்க ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் இரு வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதையடுத்​து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் திட்​டத்தை விரிவுபடுத்​தும் நோக்​கில், கோயம்​பேடு - ஆவடி வரையி​லான புதிய வழித்​தடத்தை பட்​டாபி​ராம் வரை நீட்​டிக்க திட்​ட​மிட்டு சாத்​தி​யக்​கூறு ஆய்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

இதற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. அதாவது, கோயம்​பேட்​டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்​பேர், அம்​பத்​தூர், திரு​முல்​லை​வா​யில், ஆவடி வழி​யாக பட்​டாபி​ராம் வெளிவட்​ட சாலையை இணைக்​கும் வகை​யில், திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

மொத்​தம் 21.76 கி.மீ. தூரம் கொண்​டுள்ள இந்த தடத்​தில், 19 இடங்​களில் மேம்​பால ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​படும். மொத்​தம் ரூ.9,928 கோடி​யில் இத்​திட்​டத்​தைச் செயல்​படுத்த மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு தமிழக அரசு ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த வழித்​தடத்​தில் நிலம் கையகப்​படுத்​தல் உட்பட பல்​வேறு பணி​களைத் தொடங்​கு​வதற்கு தமிழக அரசு தற்​போது அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதற்​காக, ரூ.2,442 கோடி ஒதுக்​கீடு செய்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நிலம் கையகப்​படுத்​தல், சாலைப் பணி​கள், நிலப்​பரப்பு ஆய்​வு​கள், புவி தொழில்​நுட்ப ஆய்​வு, மரம் வெட்​டு​தல் மற்​றும் மீண்​டும் நடு​தல் உட்பட பல்​வேறு பணி​களுக்கு இத்​தொகையை ஒதுக்​கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறுகை​யில், “இந்த வழித்தட நீடிப்​புக்​காக, மத்​திய அரசின் அனு​ம​திக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் முடிந்து பிறகு, இந்த திட்​டப்​பணி​களை மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டுள்​ளோம். அதற்கு முன்​பாக, நிலம் கையகப்​படுத்​தல் உள்​ளிட்ட ஆரம்​பக் கட்​டப் பணி​களை முடித்​து, தயா​ராக இருக்க முடிவு செய்​துள்​ளோம். இதன்​மூல​மாக தாமதத்​தைத் ​தவிர்க்​க முடி​யும்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x