Published : 20 Aug 2025 06:11 AM
Last Updated : 20 Aug 2025 06:11 AM

தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? - குமரி போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கொடியேற்றும்போது கிறிஸ்தவ பிரச்சார பாடல் ஒலித்ததாக வெளியான வீடியோ காட்சி.

நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்​களில் சுதந்​திரதினம், குடியரசு தினத்​தன்று தேசி​யக் கொடி ஏற்​று​வது வழக்கம். அவற்​றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்​களில் தேசியகீதத்​துக்​குப் பதிலாக, அதே மெட்​டில் கிறிஸ்​தவப் பாடலை பாடு​வது, ஒலிபரப்​புவதாகக் கூறப்படுகிறது.

அண்​மை​யில் நடை​பெற்ற சுதந்​திர தினவிழா​வில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்​றில் தேசி​யக் கொடியேற்​றிய பின்​னர், தேசிய கீதம் மெட்​டுடன் கிறிஸ்​தவப் பிரச்​சார பாடல்பாடப்​படும் வீடியோ கடந்த இரு நாட்​களாக சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது. அந்த நிகழ்வு நடந்த இடம் நாகர்​கோ​வில் என வீடியோ​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, கன்​னி​யாகுமரி மாவட்ட போலீஸார் மற்​றும் உளவுத் துறை​யினர் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “நாகர்​கோ​விலில் நடந்​தது​போல பரவி வரும் வீடியோ​வில், கிறிஸ்தவ பாதிரி​யார் மற்​றும் பொது​மக்​கள் தேசிய கீத மெட்​டுடன் கிறிஸ்​தவப் பாடலை பாடி கொடியேற்​று​வது பதி​வாகி​யுள்​ளது. இதுகுறித்து விசா​ரித்து வருகிறோம். வீடியோ​வில் பாடல் எடிட்செய்​யப்​பட்​டதா எனவும் ஆய்வு செய்து வரு​கிறோம்.

உண்மைத் தன்மை குறித்து சைபர் கிரைம் போலீ​ஸாரும் விசா​ரித்து வரு​கின்​றனர்” என்​றனர். இந்​நிலை​யில், பாடல் ஒளிபரப்பப்பட்ட வீடியோ​வில் இந்து அமைப்பு பெயரிலான ‘லோகோ’ அச்​சிடப்​பட்​டுள்​ளது. இந்த வீடியோவை சுதந்​திர தினத்தன்று இரவே முகநூலிலும் வெளி​யிட்​டுள்​ளனர். வீடியோ வெளி​யிட்​ட​வரை கண்​டறிந்​து, உண்மை நிலையை அறிய போலீஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இதுகுறித்​து, திருநெல்​வேலி வழக்​கறிஞர் அ.பிரம்மா கூறும்​போது, “தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, தேசிய கீதம் பாடா​மல், மரியாதை மட்​டுமே செலுத்​து​வது சட்​டப்​படி ஏற்​றுக் கொள்​ளப்​படும். ஆனால், தேசிய கீதம் பாடலின் இசையை மத நோக்​கில் பயன்​படுத்​துதல், அதை தேசி​யக்​கொடி ஏற்​றும் சமயத்​தில் பாடு​தல் ஆகிய​வை, அதி​காரப்​பூர்வ தேசிய கீதத்தை மாற்​றிப் பயன்​படுத்​தல் என்ற வகை​யில் அவம​திப்​பாக கருதப்​படும்.

தேசி​யக்​கொடி ஏற்​றும்​போது அரசு அங்​கீகரித்த தேசிய கீதம் மட்​டுமே பாட வேண்​டும். அதை தவிர்த்​து, வேறு எந்​தப் பாடலும் பாடக்​கூ​டாது. தேசிய கீதத்தை புதிய மெட்​டில் பாடி​னாலும், அது தேசி​யக்கொடிக்​கான மரி​யாதை விதி​முறையை மீறு​வ​தாகக் கருதப்​படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x