Published : 19 Aug 2025 06:32 AM
Last Updated : 19 Aug 2025 06:32 AM

எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? - போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: எந்த நி​தி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ளதா என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறுவன இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் உள்​ளிட்ட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக தாக்​கல் செய்​திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால் சாட்​சிகளை கலைத்து வழக்கு விசா​ரணையை நீர்த்​துப்​போகச் செய்து விடு​வார் என்​று குறிப்​பிட்​டார்.

அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி, “மனு​தா​ரர் கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்​ளார். இந்த ஓராண்டு காலத்​தி்ல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த முதலீட்​டாளர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது வரை இந்த வழக்​கில் எந்த முன்​னேற்​ற​மும் இல்​லை.

எந்த நிதி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ள​தா” என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு கண்​டனம் தெரி​வித்​தார்.

அப்​போது தேவ​நாதன் யாதவ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்​.டி.எஸ்​.மூர்த்​தி, “மனு​தா​ரருக்கு குறைந்​த​பட்​சம் 6 வார கால​மாவது இடைக்​கால ஜாமீன் வழங்​கி​னால் தான் சொத்​துகளை விற்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க ஏதுவாக இருக்​கும்” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரருக்கு சொந்​த​மான சொத்து விவரங்​கள் மற்​றும் இருப்​பில் உள்ள பணம் குறித்த விவரங்​களை ஆக.25-ம் தேதிக்​குள் அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய வேண்​டுமென தேவ​நாதன் யாதவ் தரப்​புக்கு உத்​தர​விட்​டார். மேலும், இதில் ஒரு சென்ட் நிலம் அல்​லது ஒரு ரூபாயை மறைத்​தா​லும் கூடகடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்​சரித்​து, வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x