Published : 19 Aug 2025 05:24 AM
Last Updated : 19 Aug 2025 05:24 AM

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்க போக்​குவரத்து ஊழியர் சங்கம் - சிஐடியு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம், சென்னை பல்லவன் இல்லம் அருகே மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 24 மாதங்​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள பணப்​பலன்​களை வழங்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் (சிஐடி​யு) சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்​னை​யில் பல்​ல​வன் இல்​லம் முன்பு நேற்று நடை​பெற்​றது.

பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலா​ளர்​களுக்கு 24 மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வுக்​கால பலன்​களை வழங்க வேண்​டும்; பணி​யில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்​பந்த நிலு​வையை கொடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாநிலம் முழு​வதும் 21 மையங்​களில் போக்​கு​வரத்து ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள் காத்​திருப்பு போராட்டத்தை தொடங்​கி​யுள்​ளனர்.

இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையக​மான பல்​ல​வன் இல்​லம் முன்பு அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் - சிஐடியு சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்த போராட்​டத்​துக்கு சங்​கத்​தின் தலை​வர் ஆர்​.துரை தலைமை வகித்​தார். சிஐடியு மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராசன் தொடங்கி வைத்​தார்.

தமிழக அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளன பொதுச்​செய​லா​ளர் கே.ஆறு​முக ந​யி​னார் உட்பட 200-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். போராட்​டத்​தில் சிஐடியு மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் கூறுகை​யில், “நீண்​ட​கால​மாக கோரிக்​கைகள் நிலு​வை​யில் உள்​ளன. ஓய்​வு​பெற்​றவர்​களுக்கு 25 மாதங்​களாக பணப்​பலன் வழங்​காமல் அரசு மவுனம் காக்​கிறது. இது கொடிய செயல். ஓய்​வூ​தி​யம் பெறு​வோரின் பஞ்​சப்​படி 55 சதவீதத்​தில் 23 சதவீதம்​தான் வழங்​கப்​பட்​டுள்​ளது.

2003-ம் ஆண்​டுக்​குப் பிறகு, பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். இதை தேர்​தல் வாக்​குறு​தி​களில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

இதை அமல்​படுத்த வேண்​டும். போக்​கு​வரத்​துக் கழகங்​களில், இறந்த தொழிலா​ளர்​களின் பிள்​ளை​களுக்கு வாரிசு வேலை முறையாக வழங்​காமல் உள்​ளனர். 5 ஆயிரம் பேர் வரை வேலை​யில்​லாமல் உள்​ளனர். இவர்​களுக்கு வேலை கொடுக்க வேண்​டும். போக்​கு​வரத்​துத் துறையை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்டு வரு​கிறது; இதை உடனடி​யாகக்​ கைவிட வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x