Published : 19 Aug 2025 04:57 AM
Last Updated : 19 Aug 2025 04:57 AM

வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்ட நிலத்தை வாங்​கிய​வர்​களுக்​கு, அவர்​கள் தாங்​கும் அளவி​லான தொகை நிர்​ண​யிக்​கப்​பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் சு.​முத்​து​சாமி தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்டு அது முழு​மை​யாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்​களை வாரி​யம் பயன்​படுத்த முடிய​வில்​லை. அதே​நேரம் அதன் உரிமை​யாளர்​களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்​தது.

இது முதல்​வர் முதல்​வர் கவனத்​துக்​குச் சென்​றதும், எல்​லோருக்​கும் சட்​ட​திட்​டங்​களுக்கு உட்​பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தி​னார். அதற்​காக வீட்​டு​வசதி வாரி​யம், வீட்​டு​வச​தித் துறை இணைந்து அந்த நிலங்​கள் 5 வகை​யாக பிரிக்கப்பட்​டன. இதுத​விர்த்த 10,575 ஏக்​கர் நிலம் எதிர்​காலத்​தில் எடுக்​கலாம் என்று உத்​தேசிக்​கப்​பட்ட நில​மாகும். இந்த இடத்தை அந்த நில உரிமை​யாளர்​கள் மற்​றவர்​களுக்கு சிறிது, சிறிய​தாக விற்​று​விட்டு போய்​விட்​டார்​கள்.

இதில், வாங்​கிய​வர்​களும் பாதிக்​கப்​படக் கூடாது என்​ப​தால், ஒரே ஒரு சுற்​றறிக்கை மூலம் அவர்​களுக்கு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் போக மீத​முள்ள நிலம் தான் 5 வகை​யாக பிரிக்​கப்​பட்​டது. இதில் ஐந்​தாவது வகை என்​பது வீட்டு​வசதி வாரி​யம் முழு​மை​யாக அதை கையகப்​படுத்​தி, அதில் சில மேம்​பாடு​கள் செய்​திருக்​கிறது. அதை பொறுத்​தவரை வீட்டு வசதி வாரி​யம் முழு​மை​யான உரிமையை கொண்​டுள்​ளது. முதல் இரண்டு வகை என்​பது நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டதுடன் நின்​றுள்​ளது. அதற்​குமேல் வீட்டு வசதி வாரி​யம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

இது, 40 ஆண்​டு​களுக்கு மேல் ஆகி​விட்​ட​தால், மேல் நடவடிக்கை எடுக்க முடி​யாது. மேலும், அந்த நிலங்​கள் சிறிது சிறி​தாக விற்​கப்​பட்​டு​விட்​டன. அதை எடுப்​ப​தாக இருந்​தால், ஆயிரக்​கணக்​கான வீடு​களை இடிக்க வேண்​டிய​திருக்​கும்.

இதில் நீதி​மன்​ற​மும் கேள்வி எழுப்​பி​யுள்​ள​தால், இந்த 1 மற்​றும் 2-வது வகை நிலங்​களை நாம் விடு​விப்​பது என்​பது கொள்கை முடி​வாக எடுக்​கப்​பட்​டது. அதன்​படி, 4,396.44 ஏக்​கர் நிலம் விடுவிக்​கப்​பட்​டுள்​ளது. அதில் பெரும்​பகுதி கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

மீத​முள்ள 743 ஏக்​கருக்கு அரசாணை வழங்க ஏற்​பாடு நடந்து கொண்​டிருக்​கிறது. இதில் சில​வற்​றில், நீதி​மன்ற வழக்கு போன்ற பிரச்​சினை​கள் இருக்​கின்​றன. எனவே, அதை​யும் பகுப்​பாய்வு செய்​து​விட்​டு, அதற்​குப் பிறகு​தான் அதில் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதற்​கடுத்த 3 மற்​றும் 4-வது வகையை பொறுத்​தவரை, அதற்​காக 2 ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டு, அவர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

அதில் பல நீதி​மன்​றம் மற்​றும் அரசு உத்​தர​வு​கள் இருக்​கின்​றன. அதன்​மீது வீட்​டு​வசதி வாரி​யம் செய்த விவரங்​கள் அனைத்​தும் இருக்​கின்​றன. இத்​தனை​யும் அவர்​கள் ஆய்வு செய்து அவர்​கள் கொடுக்​கும் பரிந்​துரை​யின்​படி அந்த நடவடிக்​கைகள் எடுப்​ப​தற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருக்​கின்​றன.

நவம்​பர் மாதத்​துக்​குள் அவர்​கள் பரிந்​துரை கிடைக்க வாய்ப்​புள்​ளது. அதை பின்​பற்றி வீட்​டு​வசதி வாரி​யம் டிசம்​பர், ஜனவரிக்​குள் மீத​முள்ள அந்த நிலத்​தை​யும், பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு கொடுக்க முடி​யும். இதில் வாரி​யத்​துக்​கோ, அரசுக்கோ எவ்​வித நஷ்ட​மும் ஏற்​படக் கூடாது. வாரி​யம் செல​வழித்த தொகை, அதற்​கான வட்டி கிடைக்க வேண்​டும்.

தொகை அது மிக நியாய​மான​தாக அவர்​கள் தாங்​கக்​கூடிய சக்தி படைத்​த​தாக அது இருக்க வேண்​டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்​காகத்​தான் 16 இடங்​களில் புகார்​பெட்டி வைத்து அதில் மனுக்​கள் போடுங்​கள் என்று தெரிவித்தோம். அதை அடிப்​படை​யாக வைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

ஒரு​வேளை புகார்​பெட்​டி​யில் போடா​மல் இருந்​தா​லும் கூட இதே வகை​யில் அவர்​கள் தகு​தி​யுடைய​வர்​களாக இருந்​தால் அவர்களுக்​கும் இந்த சலுகை கிடைக்​கும். ஒரு சிறு தவறும் கூட ஏற்​படக்​கூ​டாது. யாருடைய பரிந்​துரை​யின்​பேரிலும்​ இது நடை பெற கூடாது என்​ப​தில்​ தெளி​வாக உள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x