Published : 18 Aug 2025 06:04 AM
Last Updated : 18 Aug 2025 06:04 AM

பயணிகளின் தேவைக்காக தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும் ரயில்​களுக்கு கூடு​தல் நிறுத்​தங்​கள் வழங்க பயணிகள் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இக்​கோரிக்​கைகளை ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்தது.

இதை பரிசீலித்​து, தமிழகம், கேரளா, ஆந்​திரா ஆகிய மாநிலங்​களில் மொத்​தம் 33 ரயில்​களுக்கு 42 கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்கி ரயில்​வே ​வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இவற்​றில் தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது,

அதன்​விவரம்: சென்னை சென்ட்​ரல் - கர்​நா​டக மாநிலம் ஷிமோகாடவுண் - சென்னை இடையே இயக்​கப்​படும் ரயில் (12691-12692) ஆம்​பூரில் 2 நிமிடம் நின்று செல்லும். இது, ஆக.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும்​. தன்​பாத் - ஆலப்​புழா ரயில் (13351) குடி​யாத்​தம், வாணி​யம்​பாடி​யில் ஆக.18-ம் தேதி முதல் தலா 2 நிமிடம் நின்று செல்​லும்.

அரக்​கோணம் - சேலத்​துக்கு இயக்​கப்​படும் மெமு ரயில் (16080) வளத்​தூர் நிலை​யம், மேல்​பட்டி ஆகிய நிலை​யங்​களில் நின்று செல்லும். சேலம் - அரக்​கோணத்​துக்கு இயக்​கப்​படும் மெமு ரயில் (16087) மேல்​பட்​டி​யில் நின்​றுசெல்​லும். இந்த நிறுத்​தம் ஆக.18-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கிறது. திருச்சி - பாலக்​காடு இடையே இயக்​கப்​படும் விரைவு ரயில் (16843-16844) இரு​கூர் நிலை​யத்​தில் ஆக.18-ம் தேதி முதல் நின்று செல்​லும். இத்​தகவலை தெற்கு ரயில்வே நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x