Published : 18 Aug 2025 05:53 AM
Last Updated : 18 Aug 2025 05:53 AM

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு: விநாடிக்கு 22,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் 6,408 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,223 கனஅடியாக குறைந்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக இருந்த நிலை​யில், நேற்று காலை நீர்​திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடி​யாக​வும், மாலை​யில் 22,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 118.25 அடி​யாக​வும், நீர் இருப்பு 90.70 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 13-ம் தேதி காலை 6 மணி​யள​வில் நீர்​வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக பதி​வானது. இரவு 7 மணி​யள​வில் 9,500 கனஅடி​யாக நீர்​வரத்து குறைந்​தது. அதே​போல, கடந்த 14-ம் தேதி காலை விநாடிக்கு 6,500 கனஅடி​யாக நீர்​வரத்து குறைந்​தது. அன்று முதல் நேற்று மாலை வரை விநாடிக்கு 6,500 கனஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x