Published : 18 Aug 2025 05:17 AM
Last Updated : 18 Aug 2025 05:17 AM

தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து 1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை: தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்​கம் நடத்​தப்​படும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்​தி பவனில் நேற்று நடை​பெற்​றது.

தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தேசிய செய​லா​ளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்​னிலை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் செயல்​பாடு​கள், தேர்​தலுக்கு தயா​ராவது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது இக்​கூட்​டத்​தில், தேர்​தல் ஆணை​யத்​தின் முறை​கேடு​கள் நடந்​த​தாக ராகுல்​காந்தி வெளி​யிட்ட தரவு​கள் குறித்து தேசிய செய​லா​ளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு தமிழில் விளக்​கி​னார்.

தொடர்ந்​து, எழுத்​தாளர் வா.​மு.சேது​ராமன், பேராசிரியர் வசந்தி தேவி, காங்​கிரஸ் நிர்​வாகி​கள் சுஜா​தா, இரா.​வாசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தேர்​தல் ஆணை​யம் முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக கூறி, அதற்கு கண்​டனம் தெரி​வித்​தும், முறை​ கேடு​களை வெளிக்​கொண்டு வந்​ததற்​காக ராகுல் காந்​திக்கு நன்றி தெரி​வித்​தும், தூய்​மைப் பணியாளர்களின் பிரச்​சினைக்கு முதல்​வர் உரிய தீர்​வு​காண வலி​யுறுத்​தல், ஆணவ படு​கொலைக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வலியுறுத்​தல், தமிழக மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​வதை தடுக்க வலி​யுறுத்​தல் உள்​ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதனைத் தொடர்ந்து தமிழ்​நாடு காங்​கிரஸ் செயற்​குழு கூட்​ட​மும், கிரிஷ் சோடங்​கர் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் செல்​வப்​பெருந்​தகை பேசியபோது, “தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்புணர்வு ஏற்​படுத்த தமிழகம் முழு​வதும் கையெழுத்து இயக்​கம் நடத்த இருக்​கிறோம். அதில் 1 கோடி பேர் கையெழுத்​திட உள்​ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x