Published : 18 Aug 2025 05:03 AM
Last Updated : 18 Aug 2025 05:03 AM

பாமக தலைவராக ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார்; அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்: சிறப்பு பொதுக்குழுவில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ். உடன், அவரது மகள் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ. | படங்கள்: எம்.சாம்ராஜ் |

விழுப்புரம்: ​பாமக தலை​வ​ராக ராம​தாஸ் செயல்​படு​வார் என சிறப்பு பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. மேலும், அன்​புமணி மீது 16 குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. பாமக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் புதுச்​சேரி அடுத்த பட்​டானூரில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்​தார்.

பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், மாநில அமைப்​புச் செய​லா​ளர் அன்​பழகன், சேலம் மேற்கு எம்​எல்ஏ அருள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட பொதுக்​குழு, செயற்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். மேடை​யில் ராம​தாஸுக்கு அரு​கிலேயே, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர்ந்​திருந்​தார். கவுர​வத் தலை​வர் ஜி.கே. மணி தீர்​மானங்​களை வாசித்​தார்.

அங்​கீ​காரத்தை இழந்த பாமகவை மீண்​டும் பலப்​படுத்த கட்​சி​யின் அமைப்பு விதி 13-ல் திருத்​தம் செய்​து, பாமக தலை​வ​ராக ராம​தாஸ் தொடர்ந்து செயல்​படு​வார் என்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​ட​போது, நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் பலத்த ஆரவாரம் செய்​தனர். மேலும், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அமைக்​கும் முழு அதி​காரம் ராம​தாஸுக்கு வழங்​கப்​பட்​டது.

கல்​வி, வேலை​வாய்ப்​பு​களில் வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு, சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பு, தமிழகத்​தில் பூரண மது​விலக்​கு, அனைத்து ஆறுகளி​லும் 5 கி.மீ. தொலை​வுக்கு ஒரு தடுப்​பணை, காவிரி உபரிநீர் திட்​டம், காவிரி-கோ​தாவரி திட்​டம், தமிழை கட்​டாயப் பாட​மாக்​கு​வது, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது, பெரிய மாவட்​டங்​களைப் பிரிப்​பது, நந்​தன் கால்​வாய் திட்​டம்,

ஆசிரியர் காலி பணி​யிடங்​களை நிரப்​புவது, சுங்​கச்​சாவடி கட்​ட​ணத்​தைக் குறைப்​பது, தமிழகத்​துக்கு நீட் தேர்​வில் இருந்து விலக்கு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 36 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. தொடர்ந்​து, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தயாரித்த அறிக்​கையை ஜி.கே.மணி வாசித்​தார்.

அதில், சிறப்பு புத்​தாண்டு பொதுக்​குழு​வில் மைக்கை தூக்கி வீசி​யது, பனையூரில் புதிய அலு​வல​கம் தொடங்​கியது, தலை​மைக்கு கட்​டுப்​ப​டா​மல் கட்​சியை பிளவுப்​படுத்​தும் செயலில் ஈடு​பட்​டது, சமூக ஊடகங்​களில் ராம​தாஸ் உள்​ளிட்​ட​வர்​களை அவதூறாக விமர்​சிப்​பது, தைலாபுரம் இல்​லத்​தில் ஒட்​டுக்​கேட்பு கருவி வைத்​தது, அனு​ம​தி​யின்றி பொதுக்​குழு கூட்​டத்தை நடத்​தி​யது, ராம​தாஸை சந்​திக்க வருபவர்​களை தடுத்து நிறுத்​தி​யது.

பசுமை​தாயகம் அமைப்பை கைப்​பற்​றியது, தலைமை அலு​வல​கத்தை இடமாற்​றம் செய்​தது. 40 தடவை ராம​தாஸிடம் பேசியதாக பொது​வெளி​யில் பொய் பேசி​யது என அன்​புமணி மீது 16 வகை​யான குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்பட்​டு, உரிய நடவடிக்கை எடுக்க ராம​தாஸுக்​கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. கூட்​டத்​தில் நிறு​வனர் ராம​தாஸ் பேசும்​போது, “கட்​சி​யினர் மற்​றும் மக்​கள் விரும்​பும் கூட்​ட​ணியை அமைப்​பேன். 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டுக்​காக தொடர்ந்து போராடு​வோம்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x