Published : 17 Aug 2025 12:28 AM
Last Updated : 17 Aug 2025 12:28 AM

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் போராட்டம் | கோப்புப் படம்

திருச்சி: தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு சார்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களில் மொத்​தம் 10.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களது கோரிக்​கை​களில் முதன்​மை​யானது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாகும்.

அரசு ஊழியர்​கள், அவர்​களது குடும்​பத்​தினர் என சுமார் 40 லட்​சம் வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்த கோரிக்கை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர்.

சிபிஎஸ் திட்​டத்​தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்​றுள்​ளனர். 7,864 பேர் பணி​யின்​போது உயி​ரிழந்​து​விட்​டனர். 2003-க்​குப் பின் பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை எது​வும் கிடை​யாது. இதர மாநிலங்​களில் அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வு​பெறும் நாளில் இருப்​பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்​புக்கு ஏற்ப ஓய்​வூ​தி​யம் கிடைக்​கும். பணிக்​கொடை மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் உண்​டு.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது பழைய ஓய்​வூ​தி​யத்திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​து​விட்​டு, ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களுக்கு மேலாகி​யும் கோரிக்​கையை நிறைவேற்​றாமல் இருப்​பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்​ரல் அல்​லது மே மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அதற்கு முன் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். எங்​களுக்கு தேவை வாக்​குறுதி அல்ல, பழைய ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான அரசாணை தான் வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்​போது, “பு​திய ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு எந்த அழுத்​தத்​தை​யும் கொடுக்​காத நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ஒரே கையெழுத்​தில் நிறைவேற்​றி​விட முடி​யும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் வாக்​குறுதி மட்​டும் கொடுத்து வென்​று​விடலாம் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் ஏமாந்து போவார்​கள். எனவே, இந்த ஆட்​சிக் காலத்​திலேயே பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் வரும் தேர்​தலின்​போது அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் நம்​பிக்​கையை பெற முடி​யாது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x