Published : 13 Aug 2025 06:35 AM
Last Updated : 13 Aug 2025 06:35 AM

2 தடங்களில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை: சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின்​கீழ் 3 வழித்​தடங்​களில் ரூ.63,246 கோடி​யில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, பூந்​தமல்லி - பரந்​தூர், கோயம்​பேடு - ஆவடி என அடுத்​தடுத்​து, மெட்ரோ ரயில் திட்​டங்​களைச் செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, சென்​னை​யின் பிர​தான பகு​தி​யாக இருக்​கும் தாம்​பரம் - கிண்டி - வேளச்​சேரி மற்​றும்

கலங்​கரை விளக்​கம் - உயர் நீதி​மன்​றம் வரை மெட்ரோ ரயில் திட்​டம் நீட்​டிப்பு குறித்து தயாரிக்​கப்​பட்ட சாத்​தி​யக்​கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்​புதல் அளித்​த​தால், அடுத்​தகட்​ட​மாக விரி​வான திட்ட அறிக்​கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது.

அதன்​படி, தாம்​பரம் - கிண்டி - வேளச்​சேரி மெட்ரோ ரயில் தடத்​தில் மேட​வாக்​கம், பள்​ளிக்​கரணை, வேளச்​சேரி ஆகிய புறநகர் பகுதி​கள் கிண்டி மெட்​ரோவுடன் 21 கி.மீ. தூரத்​தில் இணைக்​கப்பட உள்​ளன. இதே​போல, கலங்​கரை விளக்​கத்​தில் இருந்து மெரினா கடற்​கரை, தலை​மைச் செயல​கம் வழி​யாக உயர் நீதி​மன்​றம் வரை 7 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ திட்​டம் இணைக்​கப்பட உள்ளது.

ஒப்பந்த ஆணை வழங்கல்: இந்​நிலை​யில், இந்த மெட்ரோ திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்​கையை தயாரிக்க, சிஸ்ட்ரா எம்விஏ கன்​சல்​டிங் இந்​தியா என்ற நிறு​வனத்​துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஒப்​பந்​தம் வழங்​கி​யுள்​ளது. கலங்​கரை விளக்​கம் - உயர் நீதி​மன்​றம் தடத்​தில் விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.38.20 லட்​சம், தாம்​பரம் முதல் வேளச்​சேரி வரையிலான மெட்​ரோவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.96.19 லட்​சத்​துக்​கான ஒப்​பந்த ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விரி​வான திட்ட அறிக்​கைகள் 120 நாட்​களில் சமர்ப்​பிக்​கப்பட வேண்​டும். சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாக இயக்​குநர் சித்திக் முன்​னிலை​யில், திட்ட இயக்​குநர் அர்ச்​சுனன் மற்​றும் சிஸ்ட்ரா எம்​விஏ கன்​சல்​டிங் நிறுவன துணைத் தலை​வர் பர்​வீன்குமார் ஆகியோர் இந்த ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர்.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறும்​போது, “இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, வழித்​தடப் பாதை அமை​யும் இடங்​கள், பயணி​கள் எண்​ணிக்​கை, பல்​வேறு போக்​கு​வரத்து முறை​களு​டன் ஒருங்​கிணைப்பு மற்​றும் தொழில்​நுட்ப சாத்​தி​யக்​கூறுகள் விரி​வாக மதிப்​பீடு செய்​யப்​படும்.

வழித்​தடங்​கள், போக்​கு​வரத்து நெரிசல், செல​வு​கள், மொத்த திட்ட மதிப்​பீடு உள்ளிட்டவை குறித்த முழு விவரங்​கள் இடம்​பெறும். இதையடுத்து மத்​திய, மாநில அரசின் ஒப்​புதல் பெற்று மெட்ரோ ரயில்​ திட்டப்​பணி​கள்​ மேற்​கொள்​ளப்​படும்​” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x