Published : 13 Aug 2025 06:15 AM
Last Updated : 13 Aug 2025 06:15 AM

ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஆவடி​யில் நில​வும் மக்​கள் பிரச்​சினை​களை முன்​வைத்து மாநக​ராட்​சிக்கு எதி​ராக ஆக.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடை​பெறும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டம், ஆவடி மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்​பைகள் சரிவர அள்​ளப்​படு​வ​தில்​லை. பாதாள சாக்​கடை முறை​யாக அமைக்​கப்​பட​வில்​லை. கொசு மருந்து முழு​மை​யாக அடிக்​கப்​படு​வ​தில்​லை. இதன் காரண​மாக மக்​கள் பல்​வேறு சுகா​தார சீர்​கேடு​களால் அவதி​யுற்று வரு​கின்​றனர்.

மக்​களின் வாழ்​வா​தார வசதி​களை செய்​துத​ராத நிலை​யில் வீட்​டு​வரி கடுமை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதே​போல், இங்​குள்ள கடைகளுக்கு குப்பை வரி​யும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்​களும், வியா​பாரி​களும் மிகுந்த சிரமப்​படு​கின்​றனர்.

இவ்​வாறு ஆவடி மாநக​ராட்​சி​யில் நிலவி வரும் சுகா​தார சீர்​கேடு​களை​யும், நிர்​வாக சீர்​கேடு​களை​யும், கண்​டும் காணா​மலும் இருந்து வரும் திமுக அரசு மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும் அதி​முக திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டம் சார்​பில் வரும் 22-ம் தேதி ஆவடி மாநக​ராட்சி எம்​ஜிஆர் திடலில் ஆர்ப்பாட்டம் நடை​பெறும்.

இதற்கு முன்​னாள் அமைச்​சர் பா.வளர்​மதி தலைமை தாங்​கு​கிறார். முன்​னாள் அமைச்​சர் எஸ்​.அப்​துல் ரஹீம், அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் திரு​வேற்​காடு பா.சீனி​வாசன், முன்​னாள் எம்​எல்ஏ வி.அலெக்​சாண்​டர் ஆகியோர் முன்​னிலை வகிக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x