Published : 13 Aug 2025 06:01 AM
Last Updated : 13 Aug 2025 06:01 AM

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதி​காலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகு​திக்கு வந்து தரை​யிறங்​கியது.

அப்​போது விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் உராய்ந்​து, வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​ததைப் பார்த்த ஓடு​பாதை பராமரிப்பு அதி​காரி​கள், டயர் உராய்ந்து தீப்​பிடிப்​ப​தற்​கான வாய்ப்​புள்​ள​தாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

இத்​தகவல் விமான நிலைய தீயணைப்​புத் துறைக்​கும் சென்​றது. உடனே தீயணைப்​புத் துறை​யினர் அந்த சரக்கு விமானம் நின்ற பகு​திக்கு விரைந்து சென்​று, விமானத்தை முழு​மை​யாக சோதனை செய்​து, விமான டயர்​களை​யும் ஆய்வு செய்​தனர். ஆனால் விமானத்​தில் தீப்​பிடிப்​ப​தற்​கான அறிகுறி எது​வும் இல்லை என்று தெரி​வித்​து​விட்டு சென்​றனர்.

விமானப் பொறி​யாளர்​கள் கூறுகை​யில், “வி​மானம் வந்து நின்​ற​போது, விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் அழுத்​த​மாக உராய்ந்து கொண்டு ஓடிய​தால் புகை எழும்​பி​யுள்​ளது. வழக்​க​மாக நீண்ட தூர விமானங்​கள் மற்​றும் சரக்கு விமானங்​கள் வந்து தரை​யிறங்​கும் போது, அது​போல் ஏற்​படு​வது வழக்​கம்” என்​றனர்.

விமான பாது​காப்பு அதி​காரி​கள் சரக்கு விமானத்தை முழு​மை​யாக ஆய்வு செய்​து, விமானம் முழு பாது​காப்​புடன் உள்​ள​தாகத் தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில், சென்னை விமான நிலை​யத்​தில் சரக்கு விமானம் தீப்​பிடித்​த​தாக​வும், அந்த தீயை தீயணைப்பு வீரர்​கள் வந்து அணைத்​த​தாக​வும் தவறான தகவல் பரவிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த தவறான தகவல் எப்​படிப் பரவியது என்​பது குறித்து அதி​காரி​கள்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x