Published : 13 Aug 2025 05:54 AM
Last Updated : 13 Aug 2025 05:54 AM

நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோரிக்கை சாசனம் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும்.

சாலைகளை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கையை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி முன்னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடத்​தில் மனு அளித்​து, எழில​கம் வளாகத்​தில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத்​ துறை சாலைப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் அறி​வித்​திருந்​தனர்.

இதையடுத்து பல்​வேறு மாவட்​டங்​களில் சங்​கத்​தின் மாவட்​டத் தலை​வர்​களை, காவல்​துறை​யினர் வீட்டு சிறை வைத்​தனர். சென்னை நோக்கி வாக​னங்​களில் புறப்​பட்​ட​வர்​கள் பல மாவட்​டங்​களில் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். இதை​யும் மீறி எழில​கம் வந்​தவர்​களை காவல் ​துறை​யினர் கைது செய்​தனர்.

இதைக் கண்​டித்து சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் அம்​ச​ராஜ் தலை​மை​யில் 50 பேர் வாலாஜா சாலை​யி​லிருந்து ஊர்​வல​மாக எழிலகம் நோக்கி சென்​றனர். இவர்​களை​யும் காவல்​ துறை​யினர் தடுத்​து நிறுத்​தி கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x