Published : 13 Aug 2025 05:34 AM
Last Updated : 13 Aug 2025 05:34 AM

கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம் சனிக்​கிழமை 38 மாவட்​டங்​களில் முகாம் நடை​பெறும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று முதல்வரின் தாயு​மானவர் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதனை தொடர்ந்​து, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சைதாப்​பேட்டை மசூதி தெரு​வில் உள்ள வயது முதிர்ந்​தோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இல்​லத்​துக்​குச் சென்று அத்​தி​யா​வசிய பொருட்​களை வழங்​கி​னார். சென்னை மாநக​ராட்சி மண்​டலக் ​குழுத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்​தி, மாமன்ற உறுப்​பினர்​கள் வழக்​கறிஞர் தரன், மோகன்​குமார் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின்​கீழ் தமிழகத்​தி​ல் உள்ள 34,809 ரேஷன் கடைகளுக்​குட்​பட்ட பகு​தி​களில் 70 வயதை கடந்த முதி​யோ​ருக்​கும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் ரேஷன் பொருட்​களை, ரேஷன் கடைகளுக்​குச் சென்று வாங்​கு​வதற்கு மிகப்​பெரிய இடையூறுகள் இருந்​தன. பெரும்பாலும் 70 வயது கடந்​தவர்​களுக்கு அவர்​களு​டைய கைரேகை​யில் பிரச்​சினை இருக்​கும். கடைக்கு சென்று பொருட்​களை காத்​திருந்து வாங்​கிவரு​வதற்​கு, அவர்​களால் இயலாத சூழ்​நிலை​யும் இருக்​கிறது.

1,256 இடங்​களில் முகாம்: அதனால், 70 வயதை கடந்​தவர்​களுக்​கும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் 34 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட ரேஷன் கடை ஊழியர்​கள் வீடு​களுக்​கே சென்று அவர்​களின் உணவுப் பொருட்​களை வழங்​கும் மகத்​தான திட்​டம்​தான் முதல்​வரின் தாயு​மானவர் திட்​டம்.

நலம் காக்​கும் ஸ்டா​லின் எனும் திட்​டம் மூலம் மக்​கள் பயன்​பெற்று வரு​கின்​றனர். இத்​திட்​டம் தொடங்​கப்​பட்ட முதல் வாரத்​தில் 44,418 பேரும், இரண்​டாவது வாரத்​தில் 48,418 பேரும் பயன் பெற்​றுள்​ளனர். வரும் 16-ம் தேதி சனிக்​கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை. அரசு அலு​வலர்​களுக்​கான தொடர் விடு​முறை நாட்​களாக இருப்​ப​தால் அன்று முகாம் இல்​லை.

இத்​திட்​டம் ஒவ்​வொரு வார​மும் நடத்​தப்​பட​வுள்​ளது. முதல் வாரம் 38 மாவட்​டங்​களி​லும், இரண்​டாவது வாரம் 36 மாவட்​டங்​களி​லும் நடத்​தப்​பட்​டது. வரும் வாரம் விடு​முறை என்​ப​தால், அடுத்த வாரம் 38 மாவட்​டங்​களில் நடத்​தப்​பட​வுள்​ளது. இந்த திட்​டத்தை பொறுத்​தவரை 6 மாத காலத்​துக்​குள் தமிழகம் முழு​வதும் 1,256 இடங்​களில் முகாம் நடத்​தப்​படும் என்று முதல்​வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்​தி​லுள்ள 388 வட்​டாரங்​களில் ஒவ்​வொரு வட்​டாரத்​துக்​கும் 3, சென்னை மாநக​ராட்​சி​யில் 15 முகாம்​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. இதே​போல், 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் தொகை கொண்ட 5 மாநக​ராட்​சிகளில் தலா 4 மு​காம்​களும் அதற்கு குறை​வான மக்​கள் தொகை கொண்ட 19 மாநக​ராட்​சிகளில் தலா 3 மு​காம்​களும்​ நடத்​தப்​பட​வுள்​ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x