Published : 13 Aug 2025 05:46 AM
Last Updated : 13 Aug 2025 05:46 AM

தூய்மை பணியாளர்கள் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் 

திருச்சி: சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை ஓரிரு நாட்​களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார்.

திருச்சி உறையூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சென்​னை​யில் போராட்​டம் நடத்​திவரும் மாநக​ராட்சி தூய்மைப் பணி​யாளர்​களை, துறை அமைச்​ச​ராகிய நான் சந்​தித்​துப் பேச​வில்லை என்​பது தவறு.

நாங்​கள் 4 நாட்​கள் அவர்​களிடம் பேச்​சு​ வார்த்தை நடத்​தி​யுள்​ளோம். பிரச்​சினையை சுமுக​மாக தீர்ப்​ப​தற்கு அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்து வரு​கிறோம். பணி நிரந்​தரம் குறித்து முதல்​வர்​தான் முடிவு செய்ய வேண்​டும்.

ஏற்​கெனவே 17,000 பேரை நாங்​கள் பணி நிரந்​தரம் செய்து இருக்​கிறோம் என அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் கூறி​யுள்​ளார். ஆனால், துப்​புரவுப் பணிக்​காக நியமிக்​கப்பட்ட அவர்​களை துப்​புரவு பணிக்​காக பயன்​படுத்​த​வில்​லை. நாடு முழு​வதும் துப்​புர​வுப் பணி​யில் பிரச்​சினை உள்​ளது. அவர்​கள் சொல்​வது​போல, பணி நிரந்​தரம் ஒரே நாளில் செய்​கிற காரி​யம் அல்ல. ஓரிரு நாட்​களில் தூய்​மைப் பணி​யாளர்​கள் பிரச்​சினை முடிவுக்கு வரும்.

குப்பை குவிந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக பல்​வேறு பகு​தி​களில் உள்ள தூய்​மைப் பணி​யாளர்​களை வைத்து குப்பை சேகர​மாகும் இடங்​களில் உள்ள குப்​பையை அகற்​றிவரு​கிறோம். புதி​தாக யாரை​யும் இப்​பணி​யில் நியமிக்​க​வில்​லை. தெரு நாய்​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் அரு​மை​யான உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது.

அந்த உத்​தரவு வந்​தவுடன், மாநக​ராட்​சிகள் சார்​பில் அத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும். நிதி​நிலையை பொறுத்து தேர்​தல் வாக்​குறுதிகளை ஒவ்​வொன்​றாக செயல்​படுத்தி வரு​கிறோம். ஒரே நாளில் அனைத்​தை​யும் செயல்​படுத்த முடி​யாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x