Published : 13 Aug 2025 07:53 AM
Last Updated : 13 Aug 2025 07:53 AM

பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத போர்டு, பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை மாவட்​டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் ஏராள​மான பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​கள் வைக்​கப்​படு​கின்​றன. எந்த அனு​ம​தி​யும் பெறாமல் வைக்​கப்​படும் போர்​டு​களால், போக்​கு​வரத்து நெரிசல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன.

பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற வேண்​டியது அதி​காரி​களின் கடமை​யாகும். ஆனால், அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தில்​லை. எனவே, அனு​மதி பெறாமல் பொதுப்​பாதைகள், நடை​பாதைகள் மற்​றும் சாலை​யோரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள் உள்​ளிட்​ட​வற்றை அகற்​ற​வும், அவற்றை வைத்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள் வைப்​பதை முறைப்​படுத்​து​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் ஏராள​மான உத்​தர​வு​களை பிறப்​பித்​துள்​ளது. அந்த உத்​தர​வு​களின் அடிப்​படை​யில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: அனு​மதி பெறாத பிளக்ஸ் போர்​டு, பேனர்​கள் விவ​காரத்​தில் ஏற்​கெனவே உயர் நீதி​மன்ற உத்​தர​வு​கள் உள்​ளன. அப்​படி​யிருக்​கும்​போது நீதி​மன்​றம் மீண்​டும் மீண்​டும் உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாது. அதி​காரி​கள் அவர்​களின் கடமையை செய்ய வேண்​டும் என்றே நீதி​மன்​றம் விரும்​பு​கிறது.

நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்த பிறகு அதி​காரி​கள் பணியை செய்​தால், அவர்​கள் ஏன் ஊதி​யம் பெறுகிறார்​கள்? அதி​காரி​கள் தங்​களின் அணுகு​முறையை மாற்​றிக் கொள்ள வேண்​டும்.

அதி​காரி​கள் மீது நடவடிக்கை: பொது இடங்​களில் விதி​களை மீறி அச்​சுறுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பேனர்​கள், அலங்​கார வளைவு​கள், பிளக்ஸ் போர்​டு​களை அகற்ற காவல் துறை, வரு​வாய்த் துறை, உள்​ளாட்சி அமைப்​பு​கள், நகராட்​சி, மாநகராட்சி அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும். சட்​ட​விரோத பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள் விழுந்து அசம்​பா​விதம் நிகழ்ந்தால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மக்​கள் வரிப்​பணத்​தில் இருந்து ஊதி​யம் பெறும் அரசு அலு​வலர்​கள், தங்​கள் கடமையை முறை​யாக, பொறுப்​புடன் செய்ய வேண்டியது அவசி​யம். எனவே, மக்​களுக்கு அச்​சுறுத்​தல், ஆபத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டிருக்​கும் பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். அது தொடர்​பாக நீதி​மன்றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை 2 வாரங்​களுக்கு தள்ளி வைக்​கப்​படுகிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x