Published : 13 Aug 2025 05:28 AM
Last Updated : 13 Aug 2025 05:28 AM

பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சென்னை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் திமுக கூட்டணி தோல்​வியடை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சுதந்​திர தினத்​தையொட்டி, சென்​னை​யில் பாஜக சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்சிக்​குப் பிறகு நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​களில் எத்​தனை நிறைவேற்​றினர்.

பெண்​களுக்கு ரூ.1,000 தரு​வோம் என 2021-ல் அறி​வித்​து​விட்​டு, மக்​கள​வைத் தேர்​தல் வரும் போது​தான் கொடுத்​தனர். இப்​போது மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களை திமுக​வுக்கு வேலை வாங்​கு​கின்​றனர். தாய்​மொழிக் கல்​வி, தமிழ் மொழி என்று எல்​லாம் பேசுகின்றனர்.

207 பள்​ளி​களை மூடி இருக்​கின்​றனர். தமிழக பள்ளி மாணவர்​களின் கல்​வித்​திறன் பின்​னோக்கி போய் கொண்டிருப்​ப​தாக ஆய்​வறிக்கை ஒன்​றில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தல் ஆணை​யம் ஒரு சுதந்​திர​மான அமைப்​பு. அங்கு பாஜவினர் யாரும் இல்​லை.

சாதிய படு​கொலை மட்​டுமே தமிழகத்​தில் நடக்​கிறது. நாள் ஒன்​றுக்கு நான்​கு, ஐந்து படு​கொலைகளாவது மாவட்​டத்​தில் இல்லாமல் இல்​லை. அதற்கு காரணம் சட்​டம் ஒழுங்கு சரி இல்​லை. போதை பொருட்​கள் பயன்​பாடு அதி​க​மாகி​விட்​டது. எல்லா இடங்​களி​லும் கஞ்​சா. இன்​றைக்கு விமான நிலை​யத்​தில் ரூ.7 கோடி மதிப்​பிலான கஞ்சா பிடிபட்​டுள்​ளது. காவல்​துறை சரி​யாக செயல்​படு​வ​தில்​லை.

ஆட்​சிக்கு வந்து எத்​தனை ஆண்டு ஆகி​விட்​டது, இப்​போது வந்து தாயு​மானவர் திட்​டத்தை தொடங்க வேண்​டிய அவசி​யம் என்ன, இதை தொடக்​கத்​திலேயே செய்​திருக்​கலாமே. இன்​றைக்கு திமுக​வினர் தோல்வி பயத்​தில் இருக்​கின்​றனர். அதனால் இதை எல்லாம் அவர்​கள் செய்​கின்​றனர். நிச்​ச​யம் அவர்​கள் கூட்​டணி 200 இடங்​களில் தோற்​கும். அதில் சந்​தேகமே இல்​லை. தோல்வி பயத்​தால் எல்லா திட்​டங்​களை​யும் திமுக​வினர் அறி​வித்​துக் கொண்டே இருக்​கின்​றனர்.

திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, தென்​காசி, விருதுநகர், நாகர்​கோ​வில் ஆகிய மக்​கள​வைத் தொகு​தி​களின்​கீழ் 30 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. திரு​மங்​கலம், திருப்​பரங்​குன்​றம் தொகு​தி​களை தவிர்த்​து​விட்டு ஆக.17-ம் தேதி 28 தொகு​தி​களில் பூத் கமிட்டி மாநாடு ஏற்​பாடு செய்து இருக்​கிறோம்.

இதை தொடர்ந்து கோவை, மதுரை, திண்​டிவனம், சென்னை போன்ற இடங்​களில் பூத் கமிட்டி மாநாடு நடை​பெறும். கூட்டணியில் முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை இணைப்​பது பற்​றி பிறகு பேசலாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x