Last Updated : 12 Aug, 2025 05:44 AM

 

Published : 12 Aug 2025 05:44 AM
Last Updated : 12 Aug 2025 05:44 AM

அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும்: உடுமலையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, சு.முத்துசாமி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர். படம்: எம்.நாகராஜன்

உடுமலை: ‘2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வின் தோல்வி மேற்கு மண்​டலத்​தில் இருந்​து​தான் தொடங்​கும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில், உடுமலை நேதாஜி மைதானத்​தில் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் மணீஸ் நாரணவரே வரவேற்​றார்.

தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வைதுறை அமைச்​சர் சு.​முத்​து​சாமி, உணவு மற்​றும் உணவுப் பொருள் வழங்​கல் துறை அமைச்​சர் அர.சக்​கர​பாணி, மனிதவள மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​தனர்.

இவ்​விழா​வில் ரூ.949 கோடியே 53 லட்​சத்​தில், 61 முடிவுற்ற பணி​களைத் திறந்​து​வைத்​தும், ரூ.182 கோடியே 6 லட்​சத்​தில், 35 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.295 கோடியே 29 லட்​சத்​தில், 19,785 பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மேற்கு மண்​டலத்​துக்​கான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​கள் திமுக ஆட்​சி​யில்​தான் செயல்படுத்தப்​பட்​டுள்​ளன.

எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, தான் மேற்கு மண்​டலத்​தைச் சேர்ந்​தவர் என காட்​டிக் கொண்​ட​போதும், அதி​முக ஆட்​சிக் காலத்​தில் இந்த பகு​திக்​காக எந்த திட்​டங்​களை​யும் செயல்​படுத்​த​வில்​லை. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வின் தோல்வி என்​பது மேற்கு மண்​டலத்​தில் இருந்​து​தான் தொடங்​கப் போகிறது.

‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மக்​களிடம் பெரும் வரவேற்பை பெற்​றுள்​ளது. மக்​கள் நலத் திட்​டத்​துக்கு தடை விதிக்க நீதி​மன்றம் சென்ற சி.​வி.சண்​முகத்​துக்கு ரூ.10 லட்​சம் அபராதம் விதித்​த தோடு, நீதி​மன்​றங்​களை அரசி​யல் மேடை​யாக ஆக்​கக் கூடாது எனவும் நீதிப​தி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் பாஜக அரசு அளித்​துள்ள பட்​டியல்​படி முன்​னேறிய மாநிலங்​களில் தமிழகம் முன்​னோடியாக உள்​ளது. என்​னைப் பொருத்தவரை பேச்​சை குறைத்​துக்​கொண்டு செயலில் காட்ட வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில் எம்​.பி ஈஸ்​வர​சாமி மற்​றும் 10,000-க்​கும் மேற்​பட்ட பயனாளி​கள் கலந்து கொண்​டனர். இதைத்​தொடர்ந்​து, உடுமலை நேரு வீதி​யில் கட்​டப்​பட்​டுள்ள நகர திமுக அலு​வல​கத்​தின் புதிய கட்​டிடத்தை மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

‘ரோடு ஷோ’ - முன்​ன​தாக தான் தங்​கி​யிருந்த இல்​லத்​தில் இருந்து வேனில் வந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உடுமலை பழைய பேருந்து நிலை​யத்​தில் இருந்து விழா நடை​பெறும் நேதாஜி மைதானம் வரை சுமார் 1 கி.மீ. தொலை​வுக்கு நடை​பெற்ற ரோடு ஷோவில் பங்​கேற்​றார். சாலை​யில் நடந்து சென்ற அவர், இரு​புற​மும் திரண்​டிருந்த பொது​மக்​கள் மற்​றும் கட்​சித் தொண்​டர்​களைப் பார்த்து கையசைத்​த​படி சென்​றார்.

இதைத்​தொடர்ந்​து, பொள்​ளாச்சி சென்ற முதல்​வர், பரம்​பிக்​குளம் ஆழி​யாறு பாசனத் திட்​டம் உரு​வாகக் காரண​மாக இருந்த முன்​னாள் முதல்​வர் காம​ராஜர், முன்​னாள் மத்​திய அமைச்​சர் சி.சுப்​பிரமணி​யம், முன்​னாள் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் வி.கே.பழனிச்​சாமி கவுண்​டர், நா.ம​காலிங்​கம் ஆகியோரின் முழு உரு​வச் சிலைகளை திறந்​து​ வைத்து மரி​யாதை செய்​தார்.

நினை​வரங்​கத்தை திறந்​து​வைத்து அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த பிஏபி திட்​டம் தொடர்​பான புகைப்​படக் கண்​காட்​சி​யைப் பார்​வை​யிட்​டார். அதைத்​தொடர்ந்து காரில் கோவை சென்​று, மதி​யம் 2.10 மணிக்கு விமானத்​தில் சென்னை புறப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x