Published : 11 Aug 2025 05:26 AM
Last Updated : 11 Aug 2025 05:26 AM

தேர்தல் வியூகம், கூட்டணி, கட்சி பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் தேசிய பொதுச்செயலாளர் ஆலோசனை

பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வியூ​கம், கூட்​ட​ணி, கட்​சிப் பணி​கள் குறித்து பாஜக மாநில நிர்​வாகி​களு​டன் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். தமிழக பாஜக சார்​பில் மாநில அமைப்பு செயல்​பாட்டு பயிற்சி முகாம் சென்னை​யில் நேற்று நடந்​தது.

இதற்கு தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கி​னார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மேலிட பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், முன்​னாள் மாநில தலை​வர்​கள் பொன்​.​ரா தாகிருஷ்ணன், தமிழிசை, அண்​ணா​மலை, தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா, தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் உட்பட புதி​தாக நியமிக்​கப்​பட்ட மாநில நிர்​வாகி​கள், மாவட்ட தலை​வர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்டனர்.

இதில் சட்​டப்​பேரவை தேர்​தல் வியூ​கம், கூட்​ட​ணி, களப்​பணி தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை தலை​வர்​கள் வழங்​கினர். அதி​முக - பாஜக கூட்​ட​ணியை பலப்​படுத்​து​வது, தோழமை கட்​சிகளான பாமக, தேமு​தி​கவை கூட்​ட​ணி​யில் நீடிக்க செய்​வதற்கான அணுகு​முறை​கள், சமூக ஊடகங்​களை திறம்பட எவ்​வாறு பயன்​படுத்துவது, மத்​திய அரசின் திட்​டங்​களை மக்​களிடம் கொண்டு செல்​வது என்​பது உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​களை வழங்​கினர்.

மேலும், கடந்த கால கசப்​பு​களை மறந்து அதி​முக - பாஜக கூட்​ட​ணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல உழைக்க வேண்​டும் என்​று நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் பேசும்​போது, கூட்​ட​ணி​யில் இருந்து பிரிந்து சென்​றவர்​கள் (ஓபிஎஸ்) மீண்​டும் நம் கூட்​ட​ணி​யில் இணை​வார்​கள். விரை​வில் தமிழகம் வரும் பிரதமர் அதனை செய்து காட்​டு​வார் என அவர் பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே பி.எல்​.சந்​தோஷ் - ஓபிஎஸ் சந்​திப்​புக்கு பாஜக தரப்​பில் முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக அவருடன் பாஜகவினர் தொலைபேசி​யில் பேசி​யிருந்​தனர். ஆனால், ஓபிஎஸ் தனது ஆதர​வாளர்​களு​டன் பேசி முடி​வெடுப்​ப​தாக கூறியிருந்தார்.

இந்​நிலை​யில் நேற்று அவர்​களது சந்​திப்பு எது​வும் நடக்​க​வில்​லை. இதனால், 26-ம் தேதி மோடி தமிழகம் வரும்​போது ஓபிஎஸ்ஸை சந்​திக்க வைத்​து, மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க முயற்​சிகள் நடை​பெற்​று வரு​வ​தாக நிர்​வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x