Published : 10 Aug 2025 12:06 AM
Last Updated : 10 Aug 2025 12:06 AM

இன்று சென்னை வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஓபிஎஸ் உடன் பேச்சு நடத்த திட்டம்

சென்னை: பு​திய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்​சு​வார்த்தை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது.

பிரதமர் மோடி அண்​மை​யில் தமிழகம் வந்​திருந்​த​போது அவரை சந்​திப்​ப​தற்​காக ஓ.பன்​னீர்செல்​வம் நேரம் கேட்​டிருந்​தார். ஆனால், அந்த சந்​திப்​புக்கு அனு​மதி கிடைக்​காத​தால் ஓபிஎஸ் தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதி​முக - பாஜக கூட்​டணி ஏற்​பட்ட பின்​பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்​கட்​டப்​பட்டு வரு​வ​தாக​வும், அவரது ஆதர​வாளர்​கள் தெரி​வித்து வந்​தனர். இந்​நிலை​யில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓ.பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார்.

அன்​றையை தினமே முதல்​வர் ஸ்டா​லினை 2 முறை சந்​தித்​தார். இதையடுத்து ஓபிஎஸ்-ஐ தொடர்பு கொண்ட பாஜக​வினர், அவரசப்​பட​வேண்​டாம் என அவரை சமா​தானம் செய்து மீண்​டும் கூட்​ட​ணி​யில் சேர்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர். இந்​தச் சூழ்​நிலை​யில், புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பாஜக மாநில நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் இன்று (10-ம் தேதி)நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்கவருகை தரும் தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் பல்​வேறுஆலோ​சனை​களை வழங்க இருக்​கிறார்.

இந்​நிலை​யில், ஓபிஎஸ் ஆதர​வாளர்​களை தொலைபேசி​யில் தொடர்பு கொண்ட பாஜக​வினர் ஓபிஎஸ்-பி.எல்​.சந்​தோஷ் சந்​திப்​புக்கு ஏற்​பாடு செய்​வது குறித்து பேசி​யுள்​ளனர். மேலும் வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்​போது சந்​திக்க ஏற்​பாடு செய்​வ​தாக​வும் உறுதி கூறப்​பட்​ட​தாக தெரி​கிறது. இதற்கு தற்​போது எது​வும் கூற முடி​யாது என ஓபிஎஸ் கூறிய​தாக​வும் நிர்​வாகி​களு​டன் ஆலோ​சித்த பிறகு தெரி​விப்​ப​தாக​வும்​ தகவல்​ கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x