Published : 10 Aug 2025 12:02 AM
Last Updated : 10 Aug 2025 12:02 AM

“பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறான்” - முதல்வர் பெருமிதம்

பல்லாவரம்: இந்​திய நாடே தமிழகத்​தின் வளர்ச்​சியை திரும்​பிப் பார்த்து வியப்​படை​யும் என்று முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்​டாக்​களை முதல்​வர் வழங்​கி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சிக்கு அடித்​தள​மாக இருக்​கப்​போகின்ற மாநில கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டுள்​ளேன். கல்​வி​யும் மருத்​து​வ​மும்​தான் திரா​விட மாடல் அரசின் இரு கண்​கள்.

ஒரு மனிதனுக்கு அடிப்​படைத் தேவை என்​பது, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதில், உணவும் உடை​யும் எளி​தாக கிடைத்​து​விடலாம்; ஆனால், இருக்​கும் நிலம் எளி​தாக கிடைத்​து​வி​டாது. நிலம்​தான் அதி​காரம். காலுக்கு கீழ் சிறிது நில​மும் - தலைக்கு மேல் ஒரு கூரை​யும் இன்​னும் பலருக்கு கனவு​தான். அதனால்​தான், பட்டா வழங்​கு​வ​தில் எப்​போதும் தனி கவனம் செலுத்​து​வேன்.

சொந்த வீடு இல்​லாத நிலமற்ற ஏழைக் குடும்​பங்​களை​யும்,பெண்​களை​யும் முன்​னிலைப்​படுத்தி இலவச வீட்​டு மனைப் பட்டா வழங்​கு​வதை இந்த அரசு கொள்​கை​யாக வைத்​திருக்​கிறது. 5 மாதத்​துக்​குள் 5 லட்​சம் பேருக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்க வேண்​டும் என்று இலக்கு நிர்​ண​யித்​தோம். ஆனால், ஐந்தே மாதத்தில் 7 லட்​சத்து 27,606 பேருக்கு பட்டா கிடைத்​திருக்​கிறது.

இந்த ஆட்​சிப் பொறுப்​பேற்​ற​தில் இருந்​து, தற்​போது வரை மொத்​தம் 17 லட்​சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்​கி​யிருக்​கிறோம். பல லட்​சம் குடும்​பங்​களின் கனவை நிறைவேற்​றி​யிருக்​கிறோம். தென்​குமரி முதல் சென்னை வரை சமச்​சீ​ரான வளர்ச்சி இருக்க வேண்​டும் என்று ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் பார்த்து பார்த்து திட்​டங்​களை செயல்​படுத்​துகிறோம். தொழில் நிறு​வனங்​களை கொண்டு வரு​கிறோம். வேலை​வாய்ப்​பு​களை உறுதி செய்​கிறோம். இதனால்​தான், 11.19 சதவீத பொருளா​தார வளர்ச்​சி​யோடு நம் திரா​விட மாடல் ஆட்​சி​யில் இன்​றைக்கு தமிழ்​நாடு தலை நிமிர்ந்து நிற்​கிறது. விரை​வில் இந்​திய நாடே தமிழகத்​தின் வளர்ச்​சியை திரும்​பிப் பார்த்து வியப்​படை​யும்.

பத்​தாண்​டு​காலம் பின்​னோக்​கிச் சென்ற தமிழ்​நாட்​டை, இந்த நான்கு ஆண்​டு​களில், மீட்​டெடுத்​து, வளர்ச்​சிப் பாதை​யின் உச்​சத்​துக்கு கொண்டு சேர்த்​திருக்​கிறோம். இதை பொறுத்​துக்​கொள்ள முடி​யாத எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, அவர்​களின் நண்​ப​ரான ஒன்​றிய அரசு கொடுத்த புள்​ளி​விவரத்​தையே சரி​யில்லை என்று பேசுகிறார். அவருக்கு நான் சொல்​லிக்​கொள்ள விரும்​புவதெல்​லாம் வளர்ச்​சி​யின் அளவீடு என்​பது, பொருளா​தார அளவு​கோல்​தான். இந்த அடிப்​படைகூட தெரி​யாமல், அறி​வுஜீவி போல இன்​றைக்கு அறிக்கை விட்​டுக் கொண்​டிருக்​கிறார். உங்​களுக்கு என்ன வயிற்​றெரிச்​சல் என்​றால், இந்​திய அளவில் பிரதமர் மோடி​யால் சாதிக்க முடி​யாததை, மற்ற மாநிலத்​தில் இருக்​கக்​கூடிய முதல்​வர்​கள் சாதிக்க முடி​யாததை இந்த ஸ்டா​லின் சாதித்​துக்கொண்​டிருக்​கிறானே. இது​தான் அவர்​கள் வயிற்​றெரிச்​சலுக்​குக் காரணம்.

திரா​விட மாடல் 2.0-​வில் இன்​னும் வேக​மாக, இன்​னும் அதி​க​மான வளர்ச்​சியை ஏற்​படுத்​து​வோம். இந்​திய நாடே தமிழகத்தை திரும்​பிப் பார்த்​து, ‘இது​தான் வளர்ச்சி இது​தான் வழி’ என்று சொல்​லும் அளவுக்கு நிச்​சய​மாக செயல்​படு​வோம். அதை நீங்​கள்எதிர்க்​கட்சி வரிசை​யில் உட்​கார்ந்து பார்க்​கத்​தான் போகிறீர்​கள். தமிழக மக்​களின்​ ஆதர​வோடு எங்​கள்​ பயணம்​ தொடரு​ம்​.இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x