Published : 10 Aug 2025 12:17 AM
Last Updated : 10 Aug 2025 12:17 AM

தேர்தலில் திமுகவை வீழ்த்த உறுதியேற்பு: பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என பொதுக்குழு தீர்மானம்

சென்னை/விழுப்புரம்: ​ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ஆனால், அவருடன் இருக்​கும் தீயசக்​தி​கள், குள்​ளநரி கூட்​டம் தடுக்​கிறது என பாமக பொதுக்​குழு​வில் அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

பாமக பொதுக்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்ட நிர்​வாகி​கள்அடுத்த ஓராண்​டுக்கு அந்த பொறுப்​பு​களில் அப்​படியே தொடர்​வார்​கள். மீண்​டும் பாமக​வின் உட்​கட்சி தேர்​தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்​தப்​படும் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த தீர்​மானத்தை அரங்​கில் கூடி​யிருந்த 2,500 பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கைதட்டி வரவேற்​றனர்.

அதே​போல், வன்​னியர்​களுக்கு விரை​வில் இடஒதுக்​கீடு வழங்​கா​விட்​டால், சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​தப்​படும். தமிழகத்​தில் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு நடத்​து​வதற்​கான அறி​விப்பை வரும் ஆக. 15-ம் தேதி தமிழக அரசு வெளி​யிட வேண்​டும். சட்​டப்​பேரவை தேர்​தலுக்​குப் பிறகு அமை​யும் புதிய ஆட்​சி​யில் முழு மது​விலக்கு நடை​முறைப்​படுத்​து​வதை சாத்​தி​ய​மாக்க உழைப்​பது, திமுக அரசை வரும் தேர்​தலில் வீழ்த்​து​வது உள்​ளிட்ட 19 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: இப்​போதைய இலக்கு திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வரக்​கூ​டாது. மெகா கூட்​டணி அமைப்​போம். கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் தான் நம்​முடைய குலதெய்​வம். இங்கு சாமி பிரச்​சினை இல்​லை. பூசா​ரி​தான் பிரச்​சினை. நிரந்​தர​மாக அவருக்கு இங்கே ஒரு நாற்​காலி இருக்​கிறது. அவர் வரு​வார் என்று நம்​பு​கிறேன். எனக்கு தலை​வர் பதவி மீது ஆசை கிடை​யாது. என்​னுடைய நோக்​கமே சமு​தா​யத்தை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல வேண்​டும் என்​பது தான்.

பொதுக்​குழு கூட்​டம் நடத்த நமக்கு தடைஇல்லை என நீதி​மன்​றம் கூறியதை கொண்​டாட மனமில்​லை. ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. அவருடன் இருக்​கும் சில தீயசக்​தி​கள், குள்​ள நரிக் கூட்​டம் அதனை கெடுக்​கின்​றனர். 40 முறைக்கு மேல் நான் பேசிவிட்​டேன். நமக்​குள்​ளேயே மாறி மாறி பதி​விட வேண்​டாம். சண்​டை​யிட வேண்​டாம். இப்​படி எல்​லாம் ஒரு சூழல் வரும் என்று நான் நினைத்து பார்த்​ததே கிடை​யாது. நான்​ உறு​தியாக நிற்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

ராமதாஸ் கருத்து: பூம்புகாரில் இன்று (ஆக. 10) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கு தைலாபுரம் இல்லத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பிற்பகல் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மாநாட்டுக்கு வாருங்கள்” என்றார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், அங்கிருந்து ராமதாஸ் சென்றுவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x