Published : 09 Aug 2025 05:55 AM
Last Updated : 09 Aug 2025 05:55 AM

விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

சாத்தூர்: ​விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த தமிழக அரசு தவறி​விட்​ட​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் நேற்று மாலை பிரச்​சா​ரம் மேற்​கொண்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் அரிசி, சர்க்​கரை, எண்​ணெய், பருப்பு என அனைத்து உணவுப் பொருட்​களின் விலை​யும் உயர்ந்து விட்​டது. விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த தமிழக அரசு தவறி​விட்​டது.

அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி கட்​டுக்​குள் இருந்​தது. விலை ஏறும்​போது அரு​கில் உள்ள மாநிலங்​களி​லிருந்து பொருட்​களை வாங்கி வந்​து, குறைந்த விலை​யில் கொடுத்​தோம்.

தமிழகத்​தில் கட்​டு​மானப் பொருட்​களின் விலை பல மடங்கு உயர்ந்​துள்​ளது. அதி​முக ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு ஏழை மக்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்டி தரப்​படும். அதி​முக ஆட்​சி​யில் அனைத்து குடும்ப அட்​டைக்​கும் ரூ.2 ஆயிரம் பொங்​கல் தொகுப்பு பரிசு கொடுத்​தோம். தற்​போது ஒழுகும் வெல்​லத்தை கொடுக்​கின்​றனர்.

இப்​படிப்​பட்ட ஆட்சி தேவை​யா? தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்ற 98 சதவீத வாக்​குறு​தி​களை நிறைவேற்​றி​யுள்​ள​தாக கூறுகின்​றனர். ஆனால், எதை​யும் நிறைவேற்​ற​வில்​லை. 100 நாள் வேலைத் திட்​டம், 50 நாள் வேலைத் திட்​ட​மாகி விட்​டது.

சமையல் காஸ் சிலிண்​டருக்கு மாதம் ரூ.100 மானி​யம் கொடுக்​க​வில்​லை. பெட்​ரோல், டீசல் விலை​யைக் குறைக்கவில்​லை. 2 ஆயிரம் அம்மா கிளினிக்​குகள் மூடப்​பட்டு விட்​டன. அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் 4 ஆயிரம் இடங்​களில் அம்மா கிளினிக் திறக்கப்படும்.

‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ என்று அரசு திட்​டத்​துக்கு பெயர் வைத்​துள்​ளனர். பெயர் வைப்​ப​தில் முதல்​வருக்கு நோபல் பரிசு கொடுக்​கலாம். தமிழகம் முழு​வதும் 15 லட்​சம் மருத்​துவ முகாம்​களை நடத்தி ஏழைகளுக்கு சிகிச்சை அளித்​தது அதி​முக அரசு. அதி​முக கொண்​டு​வந்த திட்​டத்​துக்கு இவர்​கள் பெயர் வைத்​துக் கொள்​கிறார்​கள்.

பல ரேஷன் கடைகளில் வேட்​டி, சேலை கொடுப்​ப​தில்​லை. அடுத்து அதி​முக ஆட்சி அமைந்​ததும், தீபாவளிக்கு பெண்​களுக்கு சேலை வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார். பிரச்​சா​ரத்​தின்​போது, அதிமுக கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் ரவிச்​சந்​திரன், முன்​னாள் எம்​எல்ஏ ராஜவர்​மன் மற்​றும் நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x