Published : 09 Aug 2025 05:22 AM
Last Updated : 09 Aug 2025 05:22 AM

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவினர் அதிருப்தி

சென்னை: மாநில கல்விக் கொள்கை குறித்து அதன் வடிவ​மைப்பு குழு​வில் இடம்​பெற்ற சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியது: அரசிடம் நாங்​கள் சமர்ப்​பித்து ஓராண்டு தாமதத்​துக்கு பிறகு, தற்​போது மாநில கல்விக் கொள்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நாங்​கள் அளித்த அறிக்​கை​யில் இருந்து முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக உள்​ளது.

நாங்​கள் பரிந்​துரை செய்​யாத பல அம்​சங்​கள் இதில் உள்​ளன. பெரிய அளவில் தொலைநோக்கு திட்​டங்​கள் எது​வும் இல்​லாமல், தமிழக அரசின் தற்​போதைய திட்​டங்​கள், செயல்​பாடு​கள் என கிட்​டத்தட்ட மானியக் கோரிக்​கை​போல உள்​ளது.

உயர்​கல்​வியை விட்​டு​விட்​டு, பள்​ளிக்​கல்விக்கு மட்​டும் தனி​யாக கல்விக் கொள்கை வெளி​யிட்​டதற்​கான காரண​மும் தெரிய​வில்​லை. கல்விக் கொள்கை வடிவ​மைப்​புக்​காக தீவிர​மாக உழைத்​தும்​, எங்​களுக்கு​ அங்​கீகாரம்​ வழங்​கப்​பட​வில்​லை. வெளி​யீட்​டு விழாவுக்​கு அழைக்​கவும் இல்​லை. இவ்வாறு கூறியுள்ளனர்​.

இந்து தமிழ் திசை தலையங்கம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டு மென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன.

இதுதொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழிலும் 2022 ஜன. 3-ம் தேதி செய்தியும் 2024 மே 23-ல் தலையங்கமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x