Published : 09 Aug 2025 05:07 AM
Last Updated : 09 Aug 2025 05:07 AM

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு

பாமக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அழைப்பை ஏற்று நேற்று உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த கட்சியின் தலைவர் அன்புமணி.

சென்னை: நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் தனது சேம்​பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்​திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசா​ரித்து பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்​தார். இதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக ராம​தாஸ் தரப்​பில் அறிவிக்கப்பட்​டுள்​ளது.

ராம​தாஸ், அன்​புமணிக்கு இடையே​யான கருத்து வேறு​பாடு நாளுக்​கு​நாள் அதி​கரித்து தனித்​தனி​யாக செயல்​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில் மாமல்​லபுரத்​தில் ஆக.9-ம் தேதி​யான இன்று பொதுக்​குழு கூட்​டம் நடத்த அன்​புமணி அழைப்பு விடுத்​தார். இதற்கு தடை கோரி ராம​தாஸ் ஆதரவு பொதுச் செய​லா​ள​ரான முரளிசங்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று நடந்​தது. அப்​போது ராம​தாஸ் தரப்​பில் வழக்​கறிஞர் அருள், வி.எஸ்​. கோபு ஆகியோ​ரும், அன்​புமணி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா மற்​றும் கே.​பாலு ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர்.

அப்​போது கருத்து தெரி​வித்த நீதிப​தி, இந்த வழக்​கில் தன்​னால் 10 நிமிடங்​களில் முடிவு எடுத்​து​விட முடி​யும் என்​றாலும், இரு​வரது நலன் கரு​தி​யும் அவர்​களு​டன் நேரில் பேச விரும்​பு​கிறேன். எனவே ராம​தாஸும் அன்​புமணி​யும் மாலை 5.30 மணிக்கு தனது சேம்பருக்கு வரு​மாறு அழைப்பு விடுத்தார்.

அதன்​படி அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் நேற்று நீதிபதி சேம்​பரில் ஆஜரா​னார். உடல்​நிலை காரண​மாக ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் சுமார் 30 நிமிடங்​ளுக்​கும் மேலாக நீதிபதி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். பின்​னர் பாமக பொதுக்​குழு​வுக்கு தடை கோரும் வழக்கின் விசா​ரணை நேற்​றிரவு நீதிபதி சேம்​பரில் மீண்​டும் நடந்​தது. அரசு தரப்​பில் கூடுதல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர். முனியப்​ப​ராஜ் ஆஜரா​னார்.

அதன்​பிறகு நேற்​றிரவு நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில், “அன்​புமணி ஆக.9 (இன்​று) நடத்​தும் பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க முடியாது” எனக்​கூறி ராம​தாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக சிவில் நீதி மன்​றத்தை நாட​வும் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இந்த உத்​தரவை எதிர்த்து ராம​தாஸ் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் உடனடி​யாக மேல்​முறை​யீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x