Published : 08 Aug 2025 01:53 PM
Last Updated : 08 Aug 2025 01:53 PM
சென்னை: வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்ட ம் 13-08-2025 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT