Last Updated : 08 Aug, 2025 01:24 PM

1  

Published : 08 Aug 2025 01:24 PM
Last Updated : 08 Aug 2025 01:24 PM

சமூக பொறுப்பு திட்டத்தில் சீரமைக்கப்பட்ட மணப்பாக்கம் ஏரி: பாசன வசதி பெறும் 150 ஏக்கர் விளை நிலங்கள்

சூணாம்​போடு அடுத்த மணப்​பாக்​கம் கிராமத்​தில் தனி​யார் நிறு​வனம் சார்​பில் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்​பில் தூர்​வாரி சீரமைக்​கப்​பட்ட ஏரி​யின் மூலம் 150-க்​கும் மேற்​பட்ட விளைநிலங்​கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், மாவட்​டம் முழு​வதும் ஊரக வளர்ச்​சித்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள ஏரி​களை, தூர்​வாரி சீரமைக்க வேண்​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், செய்​யூர் வட்​டம், சூனாம்​பேடு அடுத்த மணப்​பாக்​கம் கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி​யில் சேமிக்​கப்​படும் தண்​ணீர் மூலம் அப்​பகு​தி​யில் உள்ள விவ​சா​யிகள் சுமார் 150 ஏக்​கர் பரப்​பளவு​கொண்ட விளை நிலங்​களுக்கு பாசன வசதி பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வட்​டார வளர்ச்சி மற்​றும் ஊராட்சி நிர்​வாகங்கள் முறை​யாக பராமரிப்பு பணி​களை மேற்​கொள்​ளத​தால், ஏரி​யின் நீர்​வரத்து கால்​வாய்​கள் தூர்ந்​து,​பாசன வசதிக்கு தண்ணீர் கிடைக்​காத நிலை உள்​ளது. இதனால், ஏரியை தூர்​வாரி சீரமைக்க வேண்​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் மற்​றும் விவசா​யிகள் கோரிக்கை விடுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி​யார் நிறு​வனம் சார்​பில் பெரு நிறு​வனங்​களின் சமூக பொறுப்பு திட்​டத்​தின் கீழ் சுமார் ரூ.70 லட்​சம் மதிப்​பில் மணப்​பாக்​கம் ஏரியை தூர்​வாரி சீரமைக்க நிதி ஒதுக்​கப்​பட்​டது. இதன்​மூலம், ஏரி​யின் மதகு​கள், நீர்​வரத்து கால்​வாய்​கள், கரைகள் மற்​றும் பாசன கால்​வாய்​கள் சீரமைக்​கும் பணி​கள் கடந்த பிப்​ர​வரி மாதம் தொடங்​கியது. மேலும், இப்​பணி​கள் அனைத்​தும் நிறைவு பெற்​ற​தால் சீரமைக்​கப்​பட்ட ஏரி விவ​சா​யிகள் மற்​றும் உள்​ளூர் பொது​மக்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதில், விவ​சா​யிகள் மற்​றும் ஏரி நீரை பயன்​படுத்​து​வோர் சங்க நிர்​வாகி​கள் பங்​கேற்று ஏரியை திரும்ப பெற்​றுக்​கொண்​டனர். மேலும், தனி​யார் நிறு​வனம் சார்​பில் சீரமைக்​கப்​பட்ட ஏரி​யின் மூலம் சுற்​றுப்​புற கிராமங்​களில் உள்ள 150 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட விளைநிலங்​கள் பாசனவசதி பெறும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனினும், ஏரி​யின் பாசன கால்​வாய்​கள் மற்​றும் நீர்​வரத்து கால்வாய்கள் முழு​வது​மாக சீரமைக்​கப்​ப​டா​மல் உள்​ள​தால், உரிய சீரமைப்பு பணி​களை மேற்​கொள்ள வேண்​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, உள்​ளூர் கிராம மக்​கள் கூறிய​தாவது: சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தில் ஏரி​யின் சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப் பட்​ட​தால், மேற்​கண்ட ஏரி​யில் தற்​போது தண்​ணீர் தேங்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. அதனால், இதே​போல்​,ஊ​ராட்​சிகளில் உள்ள ஏரிகளை தூர்​வாரி சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், தனி​யார் நிறு​வனம் மூலம் ஏரி சீரமைக்​கப் பட்​ட​தால் பாசன வசதிக்கு தடை​யின்றி தண்​ணீர் கிடைக்​கும் நிலை உள்​ள​தாக அப்​பகு​தி​யில் உள்ள விவ​சா​யிகள் மகிழ்ச்சி தெரி வித்​துள்​ளனர். எனினும், இதே​போல் ஊராட்சி ஒன்​றி​யங்​களில் உள்ள ஏரி​களை சீரமைக்க மாவட்​டநிர்​வாகம்​தான்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x