Published : 08 Aug 2025 05:53 AM
Last Updated : 08 Aug 2025 05:53 AM

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை

சென்னை ஐசிஎஃப்-ல் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் நுதாரா தலைமையில் நேற்று நடைபெற்றது. ஐசிஎஃப் முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி ஆர்.மோகன்ராஜா, தமிழக அரசின் தொழிலாளர் கூடுதல் ஆணையர் லட்சுமிகாந்தன், அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் மனோஜ் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படம்: ம.பிரபு |

சென்னை: மத்​திய அரசின் தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்பு அமைச்​சகம் சார்​பில் புதிய வேலை​வாய்ப்​பு​களை உருவாக்குவதற்​காக, வேலை​வாய்ப்​புடன் இணைந்து ஊக்​கத்​தொகை வழங்​கும் வகை​யில், பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த பாரதத்துக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் நிகழ்ச்சி, தமிழகம் மற்​றும் புதுச்​சேரி துணை முதன்மை தொழிலா​ளர் ஆணை​யர் அலு​வல​கம் சார்​பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்​சாலை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதுகுறித்து, செய்​தி​யாளர்​களிடம் மத்​திய துணை முதன்மை தொழிலா​ளர் ஆணை​யர் நு​தாரா கூறிய​தாவது: உற்​பத்தி தொழில் உட்பட பல்​வேறு துறை​களில் 3.5 கோடி வேலை​வாய்ப்​பு​களை 2027 ஜூலை மாதத்​துக்​குள் உரு​வாக்​கு​வதற்​காக, ரூ.99,446 கோடி மதிப்​பீட்டில், பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த பாரதத்​துக்கான வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், வேலை வழங்​கும் நிர்​வாக​மும், முதன்​முதலாக வேலைபெறு​பவர்​களும் ஊக்​கத்​தொகை பெறு​வார்​கள்.

இந்த திட்​டத்​தின் முதல்​கட்​டம் 2025 ஏப்​.1-ம் தேதி முதல் 2027 ஜூலை 31-ம் தேதி வரை நடை​முறைப்​படுத்​தப்​படு​கிறது. அதன்​படி, வருங்​கால வைப்பு நிதிக்கு கடந்த ஏப்​ரல் மாதம் முதல் பதிவு செய்து முதன்​முறை​யாக வேலைக்கு செல்​பவர்​களுக்கு ரூ.15 ஆயிரம்வரை ஊக்​கத்​தொகை 2 தவணை​களாக வழங்​கப்​படு​கிறது. அதே​போல், வேலை வழங்​குபவர்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும்.

அதன்​படி, ரூ.10 ஆயிரம் வரை ஊதி​யம் பெறும் ஊழியரை நியமித்​தால், ரூ.1000-ம், ரூ.20 ஆயிரம் வரை ஊழியரை நியமித்​தால், ரூ.2 ஆயிரம், ரூ.20 ஆயிரத்​துக்கு மேல் ரூ.1 லட்​சம் வரை சம்​பளம் பெறும் ஊழியரை நியமித்​தால் ரூ.3 ஆயிரம் ஊக்கத்​ தொகை​யாக வேலை வழங்​குபவருக்கு வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்​வில், தமிழக அரசின் தொழிலா​ளர் கூடு​தல் ஆணை​யர் லட்​சுமி​காந்​தன், ஐசிஎஃப் முதன்மை தலை​மைப் பணி​யாளர் அதி​காரி ஆர்​.மோகன்​ராஜா, மத்​திய தொழிலா​ளர் அமலாக்க அதி​காரி எம்​.ரமேஷ், அம்​பத்​தூர் மண்டல வருங்​கால வைப்​புநிதி ஆணை​யர் மனோஜ் பிரபு, தொழிலா​ளர் அரசு காப்​பீட்டு கழகத்​தின் (இஎஸ்ஐ) துணை இயக்​குநர் சதீஷ்கு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x