Last Updated : 08 Aug, 2025 10:12 AM

 

Published : 08 Aug 2025 10:12 AM
Last Updated : 08 Aug 2025 10:12 AM

‘ரொம்ப நாளாவே பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு..!’ - ‘முட்டாப் பய’ வசனம் பேசி முட்டிக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

தேனி திமுக எம்பி-யான தங்கதமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜனும் ‘முட்டாப் பயலே’ என ஒருவரை மாற்றி ஒருவர் அரசு நிகழ்ச்சியில் அர்ச்சனை செய்து கொண்ட விவகாரம் அறிவாலய விசாரணைக்கு வருமளவுக்கு விவகாரமாகி இருக்கிறது.

கடந்த 2-ம் தேதி, ஆண்​டிபட்டி தொகு​திக்​குட்​பட்ட சக்​கம்​பட்​டி​யில் நடந்த ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வில் தான் மக்​கள் பிர​தி​நி​தி​கள் இரு​வ​ரும் இப்​படி வசை மாரி பொழிந்​தார்​கள். இந்த நிகழ்ச்​சிக்​காக வைக்​கப்​பட்ட பேனரில் தனது படத்​தைப் போட​வில்லை என முதலில் பிரச்​சினையைக் கிளப்​பியது தங்​கதமிழ்ச்​செல்​வன் தான் என்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், பயனாளி ஒரு​வ​ருக்கு கொடுக்க வேண்​டிய அரசாணையை தங்​கத் தமிழ்ச்​செல்​வன் கொடுக்​கப் போக, அதைப் பறித்து பயனாளிக்கு வழங்​கி​னார் மகா​ராஜன். இதில் சூடான தங்​கம், அந்த ‘முட்​டாப் பய’ வசனத்தை எடுத்​து​விட, மகா​ராஜனும் அதை ‘ரிபீட்​டு’ செய்​தார். நிலைமை ரசா​பாச​மாவது தெரிந்​ததும் அதி​காரி​கள் நிகழ்ச்​சியை அவசரக​தி​யில் முடித்​துக்​கொண்டு மூட்​டையைக் கட்​டி​னார்​கள்.

“தங்​க​மும் மகா​ராஜனும் பேனர்ல படம் போடாத​தால மட்​டும் மோதிக்​கல. அவங்​களுக்​குள்​ளார ரொம்ப நாளாவே பஞ்​சா​யத்து ஓடிக்​கிட்டு இருக்​கு” என்று சொல்​லும் ஆண்​டிபட்டி திமுக-​வினர், “கம்​பத்​துக்​காரரா இருந்​தா​லும் தங்​கதமிழ்ச்​செல்​வனின் அரசி​யல் தொடக்​கம் ஆண்​டிபட்டி தான். 2001-ல் ஆண்​டிபட்டி எம்​எல்ஏ ஆனவ​ரு, ஜெயலலி​தாவுக்​காக எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செஞ்​சார்.

அதன் பிறகு 2011, 2016 தேர்​தல்​கள்ல ஆண்​டிபட்டி எம்​எல்​ஏ-​வாக இருந்​தா​ரு. அப்​போதே தங்​கத்​துக்​கும் மகா​ராஜனுக்​கும் அவ்​வளவா பிடிச்​சிக்​கி​டாது. ஜெயலலிதா மறைவுக்​குப் பின்​னாடி தங்​கம் தினகரன் பக்​கம் போன​தால 2019 இடைத் தேர்​தல்ல மகா​ராஜன் ஜெயிச்​சா​ரு. அதுக்​கப்​புறம் திமுக-வுல இணைஞ்ச தங்​கம், 2021-ல் மீண்​டும் ஆண்​டிபட்​டியை எதிர்​பார்த்​தா​ரு. ஆனா, தலை​மை​யிடம் போராடி தொகு​திய தக்​கவெச்​சிக்​கிட்​டாரு மகா​ராஜன். இதனால போடி​யில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து நின்னு தோற்​றுப் போனார் தங்​கம். இதுல மகா​ராஜன் மீது தங்​கத்​துக்கு கெட்ட கோபம்.

இந்​நிலை​யில், கடந்த மக்​கள​வைத் தேர்​தல்ல தங்​கம் தேனி தொகு​தி​யில போட்​டி​யிட்​டப்ப மகா​ராஜன் தரப்பு சரிவர தேர்​தல் பணி செய்​யலைன்னு புகார் சொன்​னாங்க. ஆண்​டிபட்டி சட்​டமன்​றத் தொகு​தி​யில தனக்கு வாக்​கு​கள் குறைஞ்சு போனதா கட்​சி​யினர் முன்​னிலை​யிலேயே மகா​ராஜன் மேல தங்​கம் பழி​போட்​டாரு.

இதுக்கு நடு​வுல, ஒன்னா இருந்த தேனி மாவட்ட திமுக-வை ரெண்​டாப் பிரிச்சு வடக்கு மாவட்​டத்​துக்கு தங்​க​மும் தெற்கு மாவட்​டத்​துக்கு கம்​பம் ராமகிருஷ்ணனும் செய​லா​ளர் ஆக்​கப்​பட்​டாங்க. இதுல, தெற்கு மாவட்​டத்​துக்​குள் ஆண்​டிபட்டி வந்​துட்​ட​தால தங்​கத்தை பத்தி அலட்​டிக்​காம ராமகிருஷ்ணனை பிடிச்​சிக்​கிட்​டாரு மகா​ராஜன்.

ஆனா, எம்பி ஆனதும் ஒட்​டுமொத்த தேனி மாவட்​டத்​தையே தனது கட்​டுப்​பாட்​டுல எடுத்​துக்​கிட்​டாரு தங்​கம். ஆண்​டிபட்டி தொகு​தி​யில மகா​ராஜன் இல்​லாமலேயே நிகழ்ச்​சிகள்ல பங்​கெடுக்க ஆரம்​பிச்​சா​ரு. அப்​பப்ப தனது மகன் நிஷாந்​தை​யும் முன்​னிலைப்​படுத்த ஆரம்​பிச்​சார். இதெல்​லாம் மகா​ராஜன் தரப்​புக்கு பிடிச்​சுக்​கிடல. இந்த நிலை​யில தான், பொது நிகழ்ச்​சின்​னுகூட பார்க்​காம தங்​க​மும் மகா​ராஜனும் முட்​டாப் பய வசனம் பேசி மோதிக்​கிட்​டிருக்​காங்க” என்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தங்​கதமிழ்ச்​செல்​வன், “அரசு விழா நெறி​முறைப்​படி எம்​பி-​யின் போட்டோ விழா பேனரில் இடம்​பெற வேண்​டும். இந்த புரோட்​டோ​கால் மீறப்​பட்​டது குறித்​துத்​தான் எம்​எல்​ஏ-வை கடிந்து கொண்​டேன். ஆனால் அவர், மேடை என்​பதை மறந்து ஒரு​மை​யில் திட்​டத் தொடங்​கி​னார். பயனாளி​களுக்​கான நலத்​திட்ட ஆணை​களை என்​னிடம் இருந்து பறித்து அவரே வழங்​கி​னார்” என்​றார்.

மகா​ராஜனோ, “வய​தில் மூத்​தவன் என்ற மரி​யாதைகூட இல்​லாமல் என்னை முதலில் திட்​டத் தொடங்​கியது எம்பி தான். அதனால் நானும் உணர்ச்​சிவசப்​பட்டு திட்​டும் சூழல் ஏற்​பட்​டது. விளம்பர பேனரை வைத்​தது தனி​யார் அமைப்​பு. அதில் எம்பி படம் இல்​லாதது எனக்​குத் தெரி​யாது. அதற்கு நான் எப்​படி பொறுப்​பாக முடி​யும்?” என்​றார்.

இந்​நிலை​யில், அரசு நிகழ்ச்​சி​யில் அத்​து​மீறி நடந்து கொண்​டது தொடர்​பாக தங்​க தமிழ்ச்​செல்​வனை​யும் மகா​ராஜனை​யும் திமுக தலைமை அறி​வால​யத்​துக்கு வரவைத்து விசா​ரணை நடத்​தி​ய​தாகச் சொல்​லும் தேனி திமுக-​வினர், “இனி ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கி அடக்கி வாசிப்பாங்க” என்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x