Published : 08 Aug 2025 05:40 AM
Last Updated : 08 Aug 2025 05:40 AM

அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்

ராஜபாளையத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

ராஜபாளையம்: அதி​முக​வின் கொள்கை வேறு, கூட்​டணி வேறு என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி நேற்று ராஜ​பாளை​யம், ஸ்ரீவில்லிபுத்​தூர், சிவ​காசி தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

ராஜ​பாளை​யம் பழைய பேருந்து நிலை​யம் அருகே பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: முதல்​வர் ஸ்டா​லின் தங்​களது கூட்டணி வலு​வானது என்று கூறிவரு​கிறார்.

அவர்​களுக்கு கூட்​டணி வலிமை என்​றால், எங்​களுக்கு மக்​கள்​தான் வலிமை. திமுகவை எதிர்த்து சட்​டப்​பேர​வை​யிலும், மக்​கள் மன்​றத்​தி​லும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் பேசுவ​தில்​லை. எங்​களுக்கு கொள்கை இல்லை என்​கிறார் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன்.

அவர்​களுக்கு கொள்கை இல்​லாத​தால்​தான், மக்​கள் செல்​வாக்கை இழந்​து​விட்​டார்​கள். அதி​முக​வுக்கு கொள்கை வேறு, கூட்​டணி வேறு. மத்​திய ஆட்​சியை அகற்ற வேண்​டுமென இண்​டியா கூட்​ட​ணியை அமைத்​துள்​ளனர். அவர்​களுக்கு என்ன ஒரே கொள்கையா இருக்​கிறது. திமுக கூட்​ட​ணிக்கு ஒரே கொள்கை என்​றால், அனைத்து கட்​சிகளை​யும் திமுக​வில் இணைத்து கொள்ளலாமே? திமுக ஆட்​சிக்கு வந்​தால், தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை​களைத் தீர்ப்​போம் என்​றார்.

தற்​போது 6 நாட்​களாக தூய்​மைப் பணி​யாளர்​கள் போராடி வரு​கின்​றனர். அவர்​களை யாரும் கண்​டு​கொள்​ள​வில்​லை. அரசு ஊழியர்​கள், செவிலியர்​கள், போக்​கு​வரத்து ஊழியர்​கள், விவ​சா​யிகள் என யாருடைய போராட்​டத்​துக்​கும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் குரல் கொடுக்​க​வில்​லை. திமுக​வின் தவறுகளை கம்​யூனிஸ்ட் கட்​சிகள் சுமக்​கக் கூடாது.

தமிழக அரசில் காலி​யாக உள்ள 5.5 லட்​சம் பணி​யிடங்​கள் நிரப்​படும் என தேர்​தல் அறிக்​கை​யில் திமுக உறு​தி​யளித்​தது. ஆனால், சட்​டப்​பேர​வை​யில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், 50 ஆயிரம் அரசு ஊழியர்​கள் நியமிக்​கப்​பட்​ட​தாக கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற நிலை​யில், தற்​போது காலி பணி​யிடங்​களின் எண்​ணிக்கை 5.75 லட்​ச​மாக உயர்ந்துள்ளது.

அதி​முக ஆட்சி அமைந்​தால் தீபாவளிக்கு பெண்​களுக்கு சேலை வழங்​கப்​படும். ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு கட்​டித்தரப்​படும். வரும் தேர்​தலில் அதி​முக தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்கும். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் ராஜேந்​திர பாலாஜி, ஆர்​.பி.உதயகு​மார், காம​ராஜ் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x