Published : 07 Aug 2025 06:06 AM
Last Updated : 07 Aug 2025 06:06 AM

இதர போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி தமிழறிஞர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: எம்டிசி தகவல்

சென்னை: இதர போக்​கு​வரத்​துக் கழகங்​களில் வழங்​கப்​பட்ட பயண அட்​டையை பயன்​படுத்தி தமிழறிஞர்​கள் உள்​ளிட்​டோர் கட்டணமின்றி மாநகர பேருந்​துகளில் பயணிக்​கலாம் என, சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் பிரபு சங்கர் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை: தமிழறிஞர்​கள், எல்லை காவலர்​கள், சுதந்​திர போ​ராட்ட வீரர்​கள், மொழிப்​போர்தியாகி​கள் மற்​றும் அவரது வாரிசு​தா​ரர்​களுக்​கு, அந்​தந்த மாவட்​டத்​தில் உள்ள போக்​குவரத்​துக் கழக பேருந்துகளால் வழங்கப்​பட்ட பயண அட்​டையை பயன்படுத்​தி, சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக பேருந்​துகளில் கட்​ட​ணமில்​லாமல் பயணிக்​கலாம்.

அவர்​களில் 60 வயதுக்கு மேற்​பட்​டோர் உடன் செல்​லும் உதவி​யாள​ருக்​கும் கட்​ட​ணமில்லா பயணம் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக அரசாணை​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களும் ஓட்​டுநர், நடத்துநர்களுக்கும் தெரியப்​படுத்த வேண்​டும். இந்த உத்​தரவை மீறுபவர்கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்கப்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x