Published : 07 Aug 2025 08:36 AM
Last Updated : 07 Aug 2025 08:36 AM

பூம்புகார் மாநாட்டில் பூகம்பம் வெடிக்கலாம்! - பதறும் பாட்டாளி சொந்தங்கள்

ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியை ஒதுக்கிவைத்துவிட்டு அய்யா நடத்தும் இந்த மாநாட்டால் பாமக-வுக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என பதறுகிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். ​

பாமக-​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் வெடித்​துள்ள உரிமை மோதல் பிரச்​சினை​யானது நாளுக்கு நாள் வலுத்​துக் கொண்டே வரும் நிலையில், மகனைப் புறக்​கணித்​து​விட்டு பூம்​பு​காரில் வன்​னிய மகளிர் பெரு​விழாவை நடத்த ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராமதாஸ். கடந்த 20 ஆண்​டு​களாக அன்​புமணி இல்​லாமல் எந்த நிகழ்ச்​சி​யை​யும் நடத்​திப் பழக்​கமில்​லாத ராம​தாஸ், முதல்​முறை​யாக மகனின் தயவில்லாமல் இந்த மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்க, தனது ஆதர​வாளர்​களை முடுக்கி விட்​டுள்​ளார். இந்த மாநாட்​டில் 3 லட்​சம் மகளிர் பங்​கேற்க வேண்​டும் என்​பது அய்​யா​வின் அன்​புக்​கட்​டளை என்​கி​றார்​கள்.

மகளிர் மாநாட்​டுக்கு அன்​புமணியை அழைப்​பீர்​களா என செய்​தி​யாளர்​கள் கேட்​கும் போதெல்​லாம், “அழைப்பு விடுப்​போம்​... விடுக்​கப்​படும்​... எல்லோருக்​கும் அழைப்பு விடுக்​கி​றோம்; அனை​வ​ரும் வரலாம்” என பட்​டும் படா​மலேயே பதிலளித்து வரு​கி​றார் ராம​தாஸ். ஆனால், மாநாட்டை முன்​னின்று நடத்​தும் வன்​னியர் சங்​கத்​தினரோ, “அன்​புமணிக்கு அழைப்பு விடுக்​கப்​பட​வில்​லை” எனச் சொல்​கி​றார்​கள்.

அன்​புமணிக்கு மட்​டுமல்​லாது அவரது ஆதர​வாளர்​களை​யும் ஒதுக்​கிவைக்க திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. இதனால், மகளிர் மாநாட்​டில், அழைப்பில்​லாமல் அன்​புமணி​யும் அவரது விசு​வாசிகளும் கலந்து கொள்​வார்​களா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக சேலம் மேற்கு எம்​எல்​ஏ-​வும், பாமக (ரா​ம​தாஸ் தரப்​பு) மாநில இணை பொதுச்​செய​லா​ள​ரு​மான அருளிடம் கேட்​ட​போது, “மகளிர் மாநாட்​டுக்​காக அவருக்கு (அன்​புமணி) அழைப்பு விடுக்​கப்​பட்​டதா இல்​லையா என்​பது குறித்து அய்​யா​வுக்​குத்​தான் தெரி​யும். மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்க மற்ற நிர்​வாகி​களு​டன் இணைந்து செயல்​பட்டு வரு​கிறேன். அழைப்பு அனுப்​பப்​பட்ட விவரம் தொடர்​பாக நான் வேண்​டு​மா​னால் அய்​யா​விடம் கேட்​டு​விட்​டுச் சொல்​கிறேன்” என முடித்​துக் கொண்​டார்.

ராம​தாஸுக்கு மிக நெருக்​க​மான புள்​ளி​களில் ஒரு​வ​ரான அருள், தனக்​குத் தெரி​யாது என்று சொல்​லும்​போதே அய்யா தரப்​பில் இருந்து சின்ன அய்யா​வுக்கு இது​வரை அழைப்பு விடுக்​கப்​பட​வில்லை என்​பது உறு​தி​யாகிறது.

வடிவேல் ராவணன், அருள்

இது தொடர்​பாக பாமக (அன்​புமணி தரப்​பு) மாநில பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணனிடம் கேட்​டதற்​கு, “சின்ன அய்​யா​வுக்கு அழைப்பு விடுக்கப்​பட்​டதா என்று எனக்கு தெரி​யாது. எனக்​கும், என்​னைப் போன்​றவர்​களுக்​கும் அழைப்பு கிடை​யாது. நாங்​கள் மாநாட்​டில் கலந்து கொள்​வது குறித்து தலை​வர்​தான் (அன்​புமணி) முடி​வெடுப்​பார்” என்​றார்.

பொது​வான நிலைப்​பாட்​டில் இருக்​கும் பாமக-​வினரோ, “பாமக-​வில் இது​வரை இல்​லாத அளவுக்கு மிகப்​பெரிய பூகம்​பம் வெடிக்க பூம்​பு​கார் மகளிர் மாநாடு காரண​மாக அமைந்​து​விடுமோ என அச்​சப்​படு​கி​றோம்.

அப்​பா​வும் பிள்​ளை​யும் போட்டி பொதுக்​குழுக்​களை கூட்​டி, ஒரு​வ​ருக்கு ஒரு​வர் எதி​ரான நிலைப்​பாட்டை எடுக்​கத் திட்​ட​மிடு​கி​றார்​கள். விட்​டுக்​கொடுத்​துப் போகவேண்​டும் என இரு​வ​ரும் நினைத்​தா​லும் இரு தரப்​பிலும் இருக்​கும் சிலர் இந்​தப் பகையை தூபம் போட்டு வளர்ப்​ப​திலேயே குறியாய் இருக்​கி​றார்​கள். இது புரி​யாமல் யார் பெரிய​வர் என பார்த்​து​விடு​வோம் என அப்​பா​வும் பிள்​ளை​யும் முஷ்டியை தூக்​கிக் கொண்டு நிற்கின்றனர்.

இப்​போதும் காலம் கடந்​து​விட​வில்​லை. நடந்​ததை எல்​லாம் மறந்​து​விட்டு இரு​வ​ரும் மகளிர் மாநாட்​டில் ஒன்​றாக கைகோக்க வேண்​டும். அப்​போது தான் பாமக-வுக்​கான பழைய மரி​யாதை கிடைக்​கும்” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x