Published : 07 Aug 2025 06:04 AM
Last Updated : 07 Aug 2025 06:04 AM

உடுமலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: ​திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அடுத்த குடிமங்​கலம் பகு​தி​யில் விசா​ரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்​வாளர் சண்​முகவேல் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​:

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளதற்கு இச்​சம்​பவம் உதா​ரணம். காவல் துறை​யினருக்கே பாது​காப்​பற்ற சூழல் நில​வு​கிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், சட்​டம்- ஒழுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் காவல் துறை​யினருக்கே பாது​காப்பு இல்​லை. இந்த வழக்​கில் முறை​யான விசா​ரணை நடத்​த​வும், குற்​ற​வாளி​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​க​வும் திமுக அரசு முன்வர வேண்​டும்.

தமிழக பாஜக தலைவர் நயி​னார் நாகேந்​திரன்: அனைத்​துப் பிரி​வினரை​யும் அவதிக்​குள்​ளாக்​கும் திமுக ஆட்சி எப்​போது முடியும் என மக்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த எதிர்​பார்ப்பு நிறைவேறும்.

பாமக தலை​வர் அன்​புமணி:​ காவல் துறை முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. சட்​டம்​-ஒழுங்கை நிலைநிறுத்​தி, மக்​களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்​படுத்​தத் தவறியதற்​காக மக்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இதே​போல, தமிழக வாழ்​வுரிமை கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி.தினகரன் உள்​ளிட்​டோரும் கண்டனம்​ தெரிவித்து உள்ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x