Published : 07 Aug 2025 05:52 AM
Last Updated : 07 Aug 2025 05:52 AM

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை பிடிப்பது உறுதி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சிவகாசி / சாத்தூர்: தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிப்​பது உறுதி என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் நேற்று நடை​பெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: வரும் 17-ம் தேதி நெல்​லை​யில் நடை​பெறும் மண்டல பூத் கமிட்டி நிர்​வாகி​கள் மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, தேசி​யத் தலை​வர் ஜே.பி.நட்​டா, மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் ஆகிய மூவரில், யாராவது ஒரு​வர் கலந்து கொள்​வார்.

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்​றிக்கு பாஜக​வினர் சிறப்​பாக பணி​யாற்ற வேண்​டும். 2029-ல் அதிக பாஜக எம்​.பி.க்​களை தமிழகத்​தில் இருந்து மக்​களவைக்கு அனுப்​புவதே நமது இலக்​கு. தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிப்​பது உறு​தி. இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு மோச​மான நிலை​யில் உள்​ளது. ஆனால், இதைப் பற்றி கவலைப்​ப​டா​மல் முதல்​வர் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்​றும், ஆட்​சி​யைப் பிடிப்​போம் என்​றும் பேசி வரு​கிறார்” என்​றார்.

அதே​போல், சாத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறும்​போது, “சா​தி​யக் கொலைகளை தடுக்க தனி சட்​டம் கொண்​டுவர வேண்​டும். அரசு மருத்​து​வ​மனை​களில் பாம்பு கடி, நாய்க்​கடிக்​கு மருந்து இல்லை என்று கூறுகிறார்​கள்" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x