Published : 06 Aug 2025 05:37 AM
Last Updated : 06 Aug 2025 05:37 AM

சீன ஊடுருவல் பற்றி கேட்டால் தேசவிரோதி முத்திரை குத்துவதா? - பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: சீ​னா​வின் ஊடுரு​வல்​கள் பற்றி கேள்வி எழுப்​பி​னால், தேச விரோ​தி​கள் என்று முத்​திரை குத்​து​வ​தாக பாஜக மீது குற்​றம் சாட்​டி​யுள்ள தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு இந்​திய ஒற்​றுமை பயணத்​தின்​போது, லடாக் எல்​லை​யில் இந்தியாவின் 2,000 சதுர கிமீ பரப்​பளவை சீனா ஆக்​கிரமித்து விட்​ட​தாக ராகுல் கூறி இருந்​தார். இதையடுத்​து, அவருக்கு எதி​ராக எல்லை சாலைகள் அமைப்​பின் முன்​னாள் இயக்​குநர் உதய்​சங்​கர்  வத்​ச​வா, லக்னோ நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்​கில் ராகுல் காந்​திக்கு எதி​ராக கீழ் நீதி​மன்​றம் நடவடிக்​கைகளை எடுக்க உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது பாகிஸ்​தானுக்கு சீனா வெளிப்​படை​யாக ஆதரவு அளித்த போதி​லும் பிரதமர் மோடி​யிட​மிருந்து எந்த பதி​லும் இல்​லை. ஆனால் எல்​லைப் பகு​தி​யில் சீனா​வின் ஊடுரு​வல்​கள் பற்றி கேள்வி எழுப்​பி​னால், அவர்​களை தேச விரோ​தி​கள் என்று பாஜக முத்​திரை குத்​தும் போக்கு தொடர்​கிறது.

இத்​தகைய அவதூறுகளை தொடர்ந்து முன்​னெடுத்து வரும் பாஜக​வினருக்கு கண்​டனங்களை தெரி​வித்​துக் கொள்​கிறேன். அரசமைப்​புச் சட்​டத்​தில் வழங்​கப்​பட்​டுள்ள கருத்​துரிமை மற்​றும் பேச்​சுரிமையை நசுக்க, பாஜக அரசு முன்​னெடுத்து வரும் மிரட்டல்​கள் மற்​றும் வழக்​கு​களை காங்​கிரஸ் எதிர் கொண்டு முறியடிக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x