Published : 06 Aug 2025 05:17 AM
Last Updated : 06 Aug 2025 05:17 AM

டெல்டாவின் கடைமடைப் பகுதியை வறட்சியில் தவிக்கவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: நிர்​வாகக் குளறு​படிகளால் திமுக அரசு டெல்​டா​வின் கடைமடைப் பகு​தி​களை வறட்​சி​யில் தவிக்க விட்​டுள்​ள​தாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியி​லிருந்து நீர் திறக்​கப்பட்டிருந்தா​லும் டெல்​டா​வின் கடைமடைப் பகு​தி​களான நாகை, திரு​வாரூர், மயி​லாடு​துறை ஆகிய மாவட்​டங்​களுக்கு நீர் இன்​னும் முழு​மை​யாக வந்து சேராத​தால் குறு​வைப் பயிர்​கள் காய்ந்து வரு​வ​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

விவ​சாய பெரு​மக்​களின் வாழ்​நாள் உழைப்​பும் சேமிப்​பும் அறி​வாலய அரசின் அலட்​சி​யத்​தால் நம் கண்​முன்னே கருகி சரு​காவது மிகுந்த மன வேதனையளிக்​கிறது. சிறு மழை பெய்​தா​லும் பயிர்​கள் நீரில் மூழ்கி அழுகிப் போகின்​றன, ஆறுகள் பெருக்​கெடுத்து அணைநீர் திறந்​து​விடப்​பட்​டாலும் பயிர்​கள் வாடிப் போகின்​றன.

ஆண்​டு​தோறும் கோடிக்​கணக்​கில் நிதி ஒதுக்​கி​யும் ஆறுகள், வாய்க்​கால்​கள், கால்​வாய்​கள் போன்​றவை​கள் முறை​யாகத் தூர்​வாரப்​படு​வ​தில்​லை, மழைநீரை சேமிக்க தரமான வடி​கால்​கள் அமைக்​கப்​பட​வில்​லை. முக்​கிய ஆறுகளில் நீர்​வரத்து நிரம்​பக் காணப்​பட்​டாலும், கிளை ஆறுகள், வாய்க்​கால்​கள் எல்​லாம் வறண்டு கிடக்​கின்​றன.

தமிழகத்​துக்கு தேவை​யான பாசனத்​தேவை​களைப் பூர்த்தி செய்​வ​தாகக் கூறி நீர்​வளத் துறை என்ற ஒரு தனித்​துறையையே உருவாக்கி விளம்​பரப்​படுத்​திக் கொண்ட திமுக அரசு, வழக்​கம்​போல துறை செயல்​பாடு​களில் கோட்டை விட்​டு​விட்​டது. இனி​யும் விவ​சா​யிகளின் கோரிக்​கைகளுக்கு செவிமடுக்​காது காலம் தாழ்த்​து​வது பேராபத்​தில் சென்று முடி​யும் என்​பதை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உணர வேண்​டும்.

போர்க்​கால அடிப்​படை​யில் தமிழகத்​தின் நீர்ப்​பாசன வசதி​களை மேம்​படுத்​தும் நடவடிக்​கைகளைத் துரிதப்​படுத்த வேண்​டும். திமுக​வின் அலங்​கோல ஆட்​சி​யில் அழிவை நோக்கி பாய்ந்து கொண்​டிருக்​கும் நமது நீர்​நிலைகளைப் பாது​காப்​ப​தற்​காகத் தான் தமிழக பாஜக சார்​பில் நீர்​வளம் காப்​போம் என்ற பிரச்​சா​ரம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போன்று திமுக எனும் தீயசக்​தி​யிடம் இருந்​தும் தமிழகம் மீட்​டெடுக்​கப்​படும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதற்​கான அஸ்​தி​வாரம்​ இடப்​படும்​. இவ்​வாறு தெரிவித்துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x