Published : 06 Aug 2025 04:54 AM
Last Updated : 06 Aug 2025 04:54 AM

திருநங்கையர் மற்றும் இடை பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ​திருநங்​கையர் மற்​றும் இடை பாலினத்​தவர்​களின் திரு​மணத்​துக்கு சட்​டப்​பூர்வ அங்​கீ​காரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

எல்ஜிபிடிக்​யூஐஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமு​தா​யத்​தைச் சேர்ந்த திருநங்​கையர், மரு​விய பாலினத்​தவர், தன்​பாலின ஈர்ப்பாளர்களின் சட்​டப்​பூர்வ உரிமை​கள், பாது​காப்பு மற்​றும் இடஒதுக்​கீட்டை சட்​டப்​பூர்​வ​மாக நிலை​நாட்​டக்​கோரி சுஷ்மா மற்​றும் சீமா அகர்​வால் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக ஏற்​கெனவே நடந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் வதனா பாஸ்​கர், எஸ்​.மனு​ராஜ் ஆகியோ​ரும் தமிழக அரசு உள்​ளிட்ட எதிர்மனுதாரர்​கள் தரப்​பில் கூடு​தல் அரசு வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், அரசு வழக்​கறிஞர் யு.பரணிதரன், மூத்த வழக்​கறிஞர்​கள் ஸ்ரீராம் பஞ்​சு, ஜி.சங்​கரன், மத்​திய அரசு தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் பிரபு மனோகர் மற்​றும் வழக்​கறிஞர் பி.எஸ்​.அஜிதா உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்​டனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, திருநங்கையர்களின் வாழ்​வா​தா​ரத்தை கருத்​தில் கொண்டு தமிழக அரசு சமீபத்​தில் தமிழ்​நாடு மாநில திருநங்​கையர் கொள்கை-2025-ஐ வெளி​யிட்​டுள்​ள​தாக​வும், இந்த கொள்கை கடந்த ஜூலை 31 முதல் அமலுக்கு வந்​து​விட்​ட​தாக​வும் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிபதி பிறப்​பித்​துள்ள விரி​வான உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு திருநங்​கையர் உரிமைகள் பாது​காப்பு வரைவு விதி​களின்​படி திருநங்​கையர்​களுக்​கான கொள்​கையை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதனை வெளியிட்ட 7-வது மாநிலம் என்ற பெரு​மையை தமிழகம் பெற்​றுள்​ளது. இதற்​காக தமிழக அரசை மனமார பாராட்டுகிறேன். இந்த கொள்​கை​யின் பலனாக திருநங்​கைகள் மற்​றும் தன்​பாலினத்​தவர்​களின் சமூக வாழ்க்​கைத்​தரம் மேம்​பாடு அடையும்.

கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பில் பிர​தி​நி​தி்த்​துவ உரிமை அளிக்​கப்​படும் எனக்​கூறப்​பட்​டுள்ள நிலை​யில் கிடைமட்ட இடஒதுக்​கீடு வழங்​கப்​படுமா என்​பது குறித்து தெளிவுபடுத்​தப்​பட​வில்​லை. எனவே, இதுதொடர்​பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்​டும். இந்த கொள்​கையை திறம்பட செயல்​படுத்த அமைக்​கப்​பட்​டுள்ள மாவட்ட மற்​றும் மாநில அளவி​லான குழுக்​களில் குறைந்தபட்சம் ஒரு திருநங்​கையர் அல்​லது இந்த சமு​தாய நபர்​களின் பிர​தி​நி​தித்​து​வம் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

அவர்​களின் திரு​மணத்​துக்கு சட்​டப்​பூர்வ அங்​கீ​காரம் அளிக்​கும் வகை​யில் தமிழக அரசு சார் பதி​வாளர்​களுக்கு தகுந்த அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும். அதே​போல வாரிசுரிமைச் சட்​டங்​கள் எது​வும் தற்​போது இந்த சமு​தா​யத்​தவர்​களுக்​கான உரிமைகளை அங்​கீகரிக்​க​வில்​லை.

எனவே, அதுதொடர்​பாக​வும் முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்பட வேண்​டும். மாநில அரசு திருநங்​கையர் மற்​றும் இடை​பாலின நபர்களுக்​கான கொள்​கையை வெளி​யிட்​டுள்ள நிலை​யில், "LGBQA+’ நபர்​ களுக்​கான கொள்​கை​யை​யும் விரை​வில் வெளி​யிட வேண்​டும்.

அதே​போல பள்​ளிப்​படிப்பை நிறுத்​தும் பாலினத்​துடன் இணங்​காத நபர்​களைக் கண்​டறிந்து அவர்​கள் படிப்பை முடிக்க உதவும் மாவட்ட அளவி​லான குழு​வின் திட்​டம் பாராட்​டத்​தக்​கது. அவர்​களுக்கு ஆபத்தை விளைவிக்​கும் நபர்​களுக்கு தண்​டனையை கடுமை​யாக்க இந்த கொள்​கை​யில் வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் இந்த வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள் தரப்​பில் கூடு​தல் விளக்க அறிக்கை தாக்​கல் செய்ய வசதி​யாக வி​சா​ரணை​யை செப்​.15-க்​கு தள்​ளி வைக்​கிறேன்​. இவ்​வாறு உத்தரவிட்டுள்ளார்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x