Last Updated : 05 Aug, 2025 09:25 AM

2  

Published : 05 Aug 2025 09:25 AM
Last Updated : 05 Aug 2025 09:25 AM

அனலைக் கிளப்பும் ‘அனாதைமடம்’ டைடல் பார்க்! - எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தகிக்கும் திமுக மேயர்

நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது கடந்த தேர்தலில் திமுக அளித்தவாக்குறுதி. இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது அதை நிறைவேற்ற கிளம்பி இருக்கிறது ஆளும் கட்சி. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை... ஆனால், அதற்காக தேர்வு செய்திருக்கும் இடத்தை வைத்துத்தான் இப்போது சர்ச்சை.

​நாகர்​கோ​விலின் மையப்​பகு​தி​யில் உள்​ளது அனாதைமடம் மைதானம். திரு​வி​தாங்​கூர் மன்​னர் காலத்​தில் ‘அவிட்​டம் திரு​நாள் மைதானம்’ என்​றிருந்த இது அனாதைகள் தங்​கு​வதற்​காக​வும், இளைப்​பாறு​வதற்​காக​வும் மன்​னர்​களால் வழங்​கப்​பட்​டது. சுமார் 7 ஏக்​கர் பரப்​பளவி​லான இந்த மைதானம் தற்​போது மாநக​ராட்​சி​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. பொதுக்​கூட்​டங்​கள், பொழுது​போக்கு நிகழ்ச்​சிகள் நடத்த வாடகைக்கு விடு​வதன் மூலம் இந்த மைதானத்​தால் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.80 ஆயிரம் வரைக்​கும் வரு​மானம் ஈட்டி வரு​கிறது மாநக​ராட்​சி.

இந்த நிலை​யில், தேர்​தல் வாக்​குறு​திப்​படி நாகர்​கோ​விலில் சுமார் ரூ.600 கோடி மதிப்​பீட்​டில் டைடல் பார்க் அமைக்க ஆயத்​த​மாகி வரு​கிறது திமுக அரசு. அதற்​கான இடமாக அனாதைமடத்தை குமரி மாவட்ட ஆட்​சி​யர் அழகுமீனா அடை​யாளம் காட்டி இருப்​பது தான் இப்​போது புயலைக் கிளப்பி இருக்​கிறது. அண்​மை​யில் கூடிய நாகர்​கோ​வில் மாமன்​றக் கூட்​டத்​தில் திமுக உள்​ளிட்ட ஒட்​டுமொத்​த​மாக 52 கவுன்​சிலர்​களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். மாநக​ராட்​சி​யின் அனு​மதி பெறாமல் தன்​னிச்​சை​யாக இப்​படியொரு முடிவை எடுத்த ஆட்​சி​யருக்கு எதி​ராக கூட்​டத்​தில் கண்​டன​மும் தெரிவிக்​கப்​பட்​டது.
இதன் தொடர்ச்​சி​யாக, நாகர்​கோ​விலில் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்​வ​ருக்கு நன்றி தெரிவிக்​கப்பட்​டதுடன், அனாதைமடத்​துக்​குப் பதிலாக மாற்று இடத்​தில் டைடல் பார்க்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சிறப்​புத் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டது.

அழகுமீனா, மகேஷ்

இதற்​கிடை​யில், டைடல் பார்க் அமை​யும் இடத்தை பார்​வை​யிடு​வதற்காக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா அண்​மை​யில் அனாதைமடம் வந்​தார். அவரிடம் வடக்கு தாமரைக்​குளம் உப்​பளம் பகுதி உள்​ளிட்ட சில இடங்​களை டைடல் பார்க்​கிற்​காக மேயர் மகேஷ் பரிந்​துரைத்​தார். ஆனால், அனாதைமடம் நகரின் மையப்​பகு​தி​யில் இருப்​பதுடன், திரு​வனந்​த​புரம் விமான நிலை​யம், திருநெல்​வேலி வழித்​தடம் உள்​ளிட்ட போக்​கு​வரத்து அம்​சங்​களும் இருப்​ப​தால் இந்த இடம் தான் சரி​யாக இருக்​கும் என வரைபடம் சகிதம் அமைச்​சருக்கு விளக்​கி​னார் ஆட்​சி​யர் அழகுமீ​னா. அதை ஏற்​றுக்​கொண்டு அனாதைமடத்​திலேயே டைடல் பார்க் அமைக்க டிக் செய்​தார் அமைச்​சர்.

மாமன்​றத்​தின் சிறப்​புத் தீர்​மானத்​தை​யும் பொருட்​படுத்​தாமல் எடுக்​கப்​பட்ட இந்த முடிவுக்கு எதி​ராக 52 மாமன்ற உறுப்​பினர்​களும் இப்​போது ஓரணி​யில் திரண்டு நிற்​கி​றார்​கள். அவர்​கள், “அடுத்த மாமன்​றக் கூட்​டத்​தில் இது தொடர்​பாக புயலைக் கிளப்​புவோம். எங்​களோடு சேர்ந்து சிறப்​புத் தீர்​மானம் நிறை​வேற்​றிய திமுக மேயர் மகேஷ் இப்​போது ஏனோ மவுனம் காக்​கி​றார். ஆனால், டைடல் பார்க் இடத்தை மாற்​றா​விட்​டால் மக்​களைத் திரட்டி நாகர்​கோ​விலை ஸ்தம்​பிக்க வைப்​போம்” என்​கி​றார்​கள்.

இதுகுறித்து மேயர் மகேஷிடம் பேசினோம். “2009-ல் வரு​வாய்த் துறை கையகப்​படுத்த நினைத்த அனாதைமட​மானது பெரும் போராட்​டத்​திற்கு பிறகு மாநகராட்சி (அப்​போது நகராட்​சி) வசமாக்​கப்​பட்​டது. நாகர்​கோ​விலில் டைடல் பார்க் வரு​வதை யாரும் எதிர்க்​க​வில்​லை. அனாதைமடத்​தில் அதை அமைப்​ப​தைத் தான் எதிர்க்​கி​றார்​கள். மாற்று இடத்தை தேர்வு செய்​யும்​படி மாமன்​றத்​தில் சிறப்பு தீர்​மானம் போட்ட பின்​னரும் அனாதைமடமே தேர்​வாகி​யுள்​ளது. இந்த விஷ​யத்​தில், ஒரு மேயர் என்ற முறை​யில் முதல்​வ​ரும் அரசும் எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப்​படும் நிலை​யில் தான் நான் இருக்​கிறேன்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x