Published : 04 Aug 2025 10:52 AM
Last Updated : 04 Aug 2025 10:52 AM

‘விசுவநாதனும் சீனிவாசனும் வழி விடமாட்டேன்றாங்க!’ - புலம்பும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்

விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலரே மாவட்டச் செயலாளர் பதவிகளையும் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு தொங்குவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிமுக-வினர் புலம்புகிறார்கள். அதுவும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தப் புலம்பல் சற்று சத்தமாகவே கேட்கிறது.

அ​தி​முக துணைப் பொதுச்​செய​லா​ள​ரான நத்​தம் இரா.​விசுவ​நாதன் திண்​டுக்​கல் கிழக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கி​றார். அதே​போல் திண்​டுக்​கல் மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரான திண்​டுக்​கல் சி.சீனி​வாசன் மாநில பொருளாள​ராக இருக்​கி​றார். முன்​னாள் அமைச்​சர்​களான இவர்​கள் இரு​வ​ரும் இப்​போது எம்​எல்​ஏ-க்​களாக​வும் இருக்​கி​றார்​கள்.

இத்​தனை பொறுப்​பு​களை வைத்​திருக்​கும் இவர்​கள் இரு​வ​ரும், மாவட்ட அரசி​யலில் அவ்​வள​வாய் கவனம் செலுத்​து​வ​தில்லை என்​கி​றார்​கள். மாவட்ட அளவி​லான கட்​சிக் கூட்​டங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​களி​லும் மட்​டுமே தலை​காட்​டி​விட்​டுப் போகும் இவர்​களால் திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக மந்த நிலைக்​குப் போய்​விட்​ட​தாக மற்ற நிர்​வாகி​கள் குறைபட்​டுக் கொள்​கி​றார்​கள்.

இதுகுறித்து பேசிய அவர்​கள், “அம்மா காலத்​தில் ஒரு​வ​ருக்கு ஒரு பதவி என்​ப​தில் கண்​டிப்​புடன் இருந்​தார். ஆனால் இப்​போது, அந்​தக் கண்​டிஷன் இல்​லை. அதட்​டிப் பேசத் தெரிந்​தவர்​கள் எல்​லாம் ஒன்​றுக்கு மேற்​பட்ட பதவி​களில் இருக்​கி​றார்​கள். திண்​டுக்​கல் சீனி​வாசனும் நத்​தம் விசுவ​நாதனும் அப்​படித்​தான் இரண்டு பதவி​களில் இருக்​கி​றார்​கள். தங்​களது அதி​காரத்தை தக்​க​வைத்​துக்​கொள்ள மாநிலப் பதவி​யில் இருக்​கும் இவர்​கள், மாவட்ட அரசி​யலில் யாரும் தங்​கள் கைமீறி போய்​விடக் கூடாது என்​ப​தற்​காக மாவட்​டச் செய​லா​ளர் பதவி​களை​யும் விடா​மல் கெட்​டி​யாகப் பிடித்து வைத்​திருக்​கி​றார்​கள்.

அம்மா காலத்​தில் ஒழுங்​காக செயல்​ப​டாத மாவட்​டச் செய​லா​ளர்​களை உடனுக்​குடன் மாற்​றி​விடு​வார். இப்​போது அந்த பயம் இல்​லாத​தால் இரு​வ​ருமே பெயரளவுக்கே மாவட்​டச் செய​லா​ளர் பதவியை வைத்​திருக்​கி​றார்​கள். எழு​பது வயதைக் கடந்து விட்ட இவர்​களால் எப்​படி கட்​சியை வளர்க்க முடி​யும் என்று தலை​மை​யும் யோசிக்​க​வில்​லை. திண்​டுக்​கல் சீனி​வாசனுக்கு வலதுகர​மாக அவரது தம்பி மகனும், ஒன்​றியச் செய​லா​ள​ரு​மான ராஜசேகர் இருக்​கி​றார்.

அதே​போல் நத்​தம் விசுவ​நாதன் தனது மைத்​துனர் கண்​ணனை வலதுகர​மாக வைத்​திருக்​கி​றார். திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களைத்​தான் குறுநில மன்​னர்​கள் போல் செயல்​படு​வ​தாகச் சொல்​வார்​கள். ஆனால், இந்த மாவட்​டத்​தில் இவர்​கள் இரு​வ​ரும் தான் குறுநில மன்​னர்​களைப் போல் செயல்​படு​கி​றார்​கள். இதனால் மற்​றவர்​களின் அரசி​யல் வளர்ச்சி பாதிக்​கப்​படு​கிறது. புதி​தாக அரசி​யலுக்கு வர நினைக்​கும் இளைஞர்​களும் அதி​முக-வுக்கு வர தயங்​கு​கி​றார்​கள்” என்​ற​னர்.

முன்பு திமுக மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்த ஐ.பெரிய​சாமி​யும், நத்​தம் விசுவ​நாதனும் ஒரு​வர் தொகு​தி​யில் மற்​றவர் வெயிட்​டான வேட்​பாளரை நிறுத்த மெனக்​கிடு​வ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு கிளம்​பியது. இதனால் 2016-ல் ஆத்​தூர் தொகு​தி​யில் ஐ.பெரிய​சாமியை எதிர்த்து நத்​தம் விசுவ​நாதனையே மோதவிட்டார் ஜெயலலி​தா. அந்​தத் தேர்​தலில் விசுவ​நாதன் தோற்​றுப் போனார். அப்​படி எல்​லாம் பந்​தாடி படிப்​பினை கொடுக்​கும் தைரி​யம் இப்​போதுள்ள அதி​முக தலை​மைக்கு இருக்​கு​மா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x