Published : 04 Aug 2025 04:56 AM
Last Updated : 04 Aug 2025 04:56 AM

7-வது முறையாக ஆட்சி அமைக்க உறுதியேற்போம்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தமிழகத்​தில் 7-வது முறை​யாக திமுக ஆட்சி அமைந்​திட கருணாநிதி நினைவு நாளில் உறு​தி​யேற்​போம் என்று தொண்​டர்​களுக்கு திமுக தலை​வரும் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: நான்​காண்டு கால திமுக ஆட்​சி​யில் நாள்​தோறும் மாநில உரிமை​களுக்​கான போராட்​டம்​தான். தமிழகத்​தின் உரிமை​களை காத்​திடு​வதற்​காக நாடாளு​மன்​றத்​தில் போர்க்​குரல் எழுப்​புவதோடு, உச்ச நீதி​மன்​றத்​தி​லும் சட்​டப்​போ​ராட்​டத்தை நடத்​துகிறது திமுக அரசு.

அதற்​கான நெஞ்​சுரத்தை நமக்​குத் தந்​திருப்​பவர் கருணாநிதி தான். தமிழகத்​தின் நலன் மீது கொஞ்​ச​மும் அக்​கறை​யில்​லாத அதிமுக, தமிழகத்தை வஞ்​சிக்​கும் பாஜக​வுடன் கூட்​டணி சேர்ந்து தமிழர்​களுக்கு மிகப்​பெரும் துரோகத்தை இழைத்து வரு​கிறது.

உண்​மை​யான அதி​முக தொண்​டர்​களே மனம் புழுங்​கு​கிற வகை​யில், அடிப்​படை கொள்​கைகள் ஏது​மற்ற எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி டெல்லி வரை சென்று பாஜக​வுடன் கூட்​டணி சேர்ந்​திருக்​கிறார். சேராத இடந்​தன்​னில் சேர்ந்து தீராத பழி சுமந்​த​படி ஊர் ஊராக பயணித்​து, பொய்​களைப் பிரச்​சா​ரம் செய்து கொண்​டிருக்​கிறார்.

இந்​தி​யா​வின் முதல் செம்​மொழி என்ற தகு​திபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்​கு​கிற தமிழர் விரோத பாஜக அரசு, சம்​ஸ்​கிருத மொழிக்கு பல்​லா​யிரக்​கணக்​கான கோடி ரூபாய்​களை கொட்​டிக் கொடுக்​கிறது.

இந்தி அல்​லாத மொழிகளைச் சிதைக்​கின்ற வகை​யில் தேசி​யக் கல்வி கொள்​கை-2020 மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்​கிறது. ஒடுக்​கப்​பட்ட, பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்​குக் கிடைக்​கின்ற கல்​வியை பறிக்​கின்ற வகை​யில் குலக்​கல்வி முறையை கொண்டு வரத்​துடிக்​கிறது.

அறி​வியல்​பூர்​வ​மாக நிறு​வப்​பட்ட தமிழர் பண்​பாட்டு அடை​யாள​மான கீழடி அகழாய்வு முடிவு​களை பாஜக அரசு வெளி​யிட மறுக்​கிறது. ஆரிய பண்​பாட்டை நம் மீது திணிக்க பார்க்​கிறது. நாம் பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்​சிகளை எதிர்த்து நிற்​கிறோம். எதிர்க்​கட்​சி​யாக உள்ள அதி​முகவோ அடங்கி ஒடுங்கி பாஜக​வுக்கு சேவகம் செய்து கொண்​டிருக்​கிறது.

கருணாநிதி வழியில்.. “வீரன் சாவதே இல்​லை, கோழை வாழ்​வதே இல்​லை“ என்​றார் கருணாநி​தி. திமுக​வின் களத்​தில் வீரர்களாக நிற்​கிறார்​கள். தமிழை காக்​க​வும், தமிழகத்​தின் உரிமை​களை மீட்​க​வும் திமுக என்​றென்​றும் கருணாநிதி வழி​யில் உறுதியுட​னும் தெளிவுட​னும் தன் போராட்​டத்தை முன்​னெடுக்​கும். தமிழ் மக்​களின் வளமான வாழ்​வுக்​கான திட்​டங்​களைத் தொடர்ந்து செயல்​படுத்​தும். என்​றென்​றும் கருணாநிதி நினை​வு​களில் வாழ்​கின்ற கோடிக்​கணக்​கான தொண்டர்களில் உங்களில் ஒரு​வ​னான நானும் இருக்​கிறேன்.

ஆக.7-ம் தேதி கருணாநிதி நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்​கும் அவர் நினைவை போற்​று​வோம். வங்க கடற்​கரை​யில் தன் அண்​ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்​டுள்ள கருணாநிதி நினை​விடம் நோக்கி ஆக.7-ம் தேதி நடை​பெறும் அமைதி பேரணியில் தொண்டர்கள் கடலென திரண்டு வணக்​கத்தை செலுத்​து​வோம்.

மாவட்​டம்​தோறும் அமைக்​கப்​பட்​டுள்ள கருணாநிதி சிலைகளுக்கு அந்​தந்த மாவட்ட கட்சி நிர்​வாகி​கள், தொண்டர்கள் மாலையிட்டு மரி​யாதை செலுத்​திட வேண்​டும். கிளைதோறும் கருணாநி​தி​யின் நினைவு போற்​றப்பட வேண்​டும்.

வீடு​களி​லும், வீதி​களி​லும் தமிழ்​காத்த போராளி​யாம் கருணாநிதி படங்​களுக்​கு, மலர்​தூவி வணக்​கம் செலுத்​துங்​கள். கருணாநிதியின் நினை​வு​களை நெஞ்​சிலேந்​தி, கொள்​கைவழி பயணத்தை தொடர்ந்​து, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் 7-வது முறை​யாக தி​முக ஆட்சி அமைந்​திட உறு​தி​யேற்​போம். ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்​பில்​ மக்​களை ஒருங்​கிணைத்​து களத்தில்​ வெல்​வோம்.​ இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x