Published : 03 Aug 2025 06:46 AM
Last Updated : 03 Aug 2025 06:46 AM

தேனி மாவட்டத்தில் வெடித்த உட்கட்சி பூசல்: திமுக எம்.பி. - எம்எல்ஏ இடையே காரசாரமான வாக்குவாதம் - நடந்தது என்ன?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த அரசு விழாவில் ஆட்சியர் முன்னிலையில் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன்.

தேனி: மருத்​துவ முகாமில் திமுக எம்​.பி. மற்​றும் எம்​எல்ஏ ஆகியோர் மேடை​யிலேயே கார​சா​ர​மாக ஒரு​மை​யில் திட்டி வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். ஆட்​சி​யர், பொது​மக்​கள் முன்​னிலை​யில் நடை​பெற்ற இந்த மோதல் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தேனி மாவட்​டம் ஆண்​டிபட்டி வட்​டத்​தில் உள்ள சக்​கம்​பட்டி இந்து மேல்​நிலைப் பள்​ளி​யில் சுகா​தா​ரத் துறை சார்​பில் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்ட மருத்​துவ முகாம் நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் ரஞ்​ஜீத்​சிங் தலை​மை​யில் நடந்த இம்​மு​காமில், திமுக தேனி எம்​.பி. தங்க தமிழ்ச்​செல்​வன், ஆண்​டிபட்​டி, பெரியகுளம் திமுக எம்​எல்​ஏக்​கள் மகா​ராஜன், சரவணக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

முகாமின் வரவேற்பு பேனரில் தனது படம் இல்​லாததைக் கண்டு கோபத்​துடன் மேடைக்கு வந்த தேனி எம்​.பி. தங்​க ​தமிழ்ச்​செல்​வன், தனது படம் இடம் பெறாதது ஏன் என்று ஆண்டிபட்டி எம்​எல்ஏ மகாராஜனிடம் கேட்​டு, கோப​மாக திட்​டி​னார்.

நான்தான் கொடுப்பேன்... பின்​னர் நிகழ்ச்சி தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக கர்ப்​பிணி​களுக்கு பாது​காப்பு பெட்​டகம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்​து, கட்​டு​மான நல வாரி​யம் சார்​பில் விபத்து நிவாரணத் தொகைக்​கான ஆணை வழங்​கப்​பட்​டது. எம்​.பி. தங்க தமிழ்ச்​செல்​வன் பாதிக்​கப்​பட்​டோர் குடும்​பத்​தினருக்கு நிவாரணத் தொகைக்​கான ஆணையை வழங்க முற்​பட்​ட​போது, அதை ஆண்​டிபட்டி எம்​எல்ஏ மகா​ராஜன் பறித்​து, ‘இது நான் வாங்​கிக் கொடுத்​தது, நான்​தான் கொடுப்​பேன்’ என்று கூறி, பயனாளி​யிடம் கொடுத்​தார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த தங்க தமிழ்ச்​செல்​வன், எம்​எல்ஏ மகா​ராஜனை ஒரு​மை​யில் திட்​டத் தொடங்​கி​னார். இதைக் கேட்ட எம்​எல்ஏ மகா​ராஜனும், கோபத்​தில் கார​சா​ர​மாக பேசி​னார். மைக்கில் இந்த வாக்​கு​வாதம் பலருக்​கும் கேட்​ட​தால், அனை​வரும் அதிர்ச்சி அடைந்​தனர். மாவட்ட ஆட்​சி​யர் மற்றும் பொது​மக்​கள் முன்​னிலை​யில், மேடை​யிலேயே இரு​வரும் உரத்த குரலில் சண்​டை​யிட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் இரு​வரை​யும் சமா​தானப்​படுத்த முயன்​றனர். அப்​போது, செய்​தி-மக்​கள் தொடர்பு அலு​வலர் நல்​லதம்பி மைக்கை வாங்​கி, அவசர அவசர​மாக நன்றி கூறி, நிகழ்ச்​சியை முடித்​து ​வைத்​தார். பின்​னர் எம்​.பி. எம்​எல்​ஏ.ஆகியோர் அடுத்​தடுத்து அங்கிருந்து வெளி​யேறினர். மேடை​யிலேயே திமுக எம்​.பி. எம்​எல்ஏ ஆகியோர் பொது​மக்​கள் முன்​னிலை​யில் கார​சா​ர​மாக சண்​டை​யிட்​டது, திமுக​வினரின் கோஷ்டிப் பூசலை வெளிக் கொண்டு வந்​துள்​ளது என்று பலரும் விமர்​சித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x