Published : 01 Aug 2025 01:35 PM
Last Updated : 01 Aug 2025 01:35 PM

அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் - அரசுக்கு வருவாய் இழப்பு 

படங்கள்: எம்.முத்துகணேஷ்

தமிழகத்​தில் ஏற்​படும் விபத்​துகளில் பெரும்​பாலானவை குடி​போதை​யில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் ஏற்​படு​வ​தாக ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. அடுத்​த​தாக, அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் விபத்​துகள் நிகழ்​வ​தாக​வும் ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. வாகன ஓட்​டிகள் குடித்​திருக்​கிறார்​களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்​ப​தில் பல நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தால், காவல் துறை கடமைக்​காக ஆய்வு செய்​கின்​றன.

ஆனால், பாரம் ஏற்றி வரும் வாக​னங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவு​தான் ஏற்​றப்​பட்​டிருக்​கிறதா என எளி​தாக சோதிக்க முடி​யும். வட்​டார போக்​கு​வரத்து துறை​யினர், காவல் துறை​யினர் தங்​கள் பணியை சரி​யாக செய்​தால், சாலை விபத்​துகள் தவிர்க்​கப்​படும். ஆனால், இந்த இரு துறை​களும் அரசுக்கு வரு​வாய் இழப்பை ஏற்​படுத்​தி, தங்​கள் வரு​வாயை மட்​டும் அதி​கரித்து கொள்​கின்​றன.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நூறுக்​கும் மேற்​பட்ட லாரி​கள் கனிமவளத்தை கொண்டு செல்​கின்​றன. இதில் அதிக பாரம் ஏற்​றி​னால், அதிக வாடகை பெறலாம் என்ற எண்​ணத்​தில் சில ஓட்​டுநர்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவுக்கு மீறி பாரம் ஏற்றி செல்​கின்​றனர். அதனை சோதிக்க வேண்​டிய அதி​காரி​கள், அதை செய்​யாமல் ஆபத்​தான வகை​யில் வாக​னங்​களை இயக்க அனு​ம​தித்து விடு​கின்​றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக
பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்.

அதிக எடை ஏற்​றிச் செல்லும் வாக​னங்​கள் பழு​தாகி நின்று போனால் மற்ற வாக​னங்​கள் அதில் மோதி உயி​ரிழப்பு ஏற்​படுகிறது. அதிக எடை ஏற்​றிய வாக​னத்​துக்கு ரூ. 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்​டத்​தில் இடமிருக்​கிறது. சரி​யாக, முறை​யாக செயல்​ப​டாத அதி​காரி​களை தண்​டிக்​க​வும் சட்​டம் இருக்​கிறது.

போக்​கு​வரத்​து​துறை மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் கையூட்டு பெறாமல் கண்​டிப்பு மற்​றும் மனசாட்​சி​யுடன் நடந்து கொண்டு தவறு செய்​பவர்​களை நீதி​மன்​றத்​தில் நிறுத்​தி​னால், அதிக பாரம் ஏற்றிச் செல்​லும் வாக​னங்​களால் ஏற்​படும் சாலை விபத்​துகள், உயி​ரிழப்​பு​கள் நிச்​ச​யம் குறை​யும். அரசுக்​கும் வரு​மானம் அதி​கரிக்​கும்.

இது குறித்து சமூக ஆர்​வலர் மித்​ரன் கூறியது: அனு​ம​திக்​கப்​பட்​டதை​விட அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் சாலை​யில் பெரும் ஆபத்து ஏற்​படு​கிறது. 2005-ம் ஆண்​டில் சாலைகளில் கூடு​தல் பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களை இயக்​கு​வதற்கு உச்​சநீ​தி​மன்​றம் தடை விதித்​தது. இருப்​பினும், கூடு​தல் சுமை ஏற்​றிச் செல்​லும் போக்கு தொடர்ந்து வரு​கிறது.

சாலை விபத்​துகளில் அதிக உயி​ரிழப்பு ஏற்​படு​வதற்கு முக்​கிய காரண​மாக விளங்​கு​வது அதிக பாரத்தை ஏற்​றிச் செல்​லும் சரக்கு வாக​னங்​களே என்​ப​தால், அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் சரக்கு வாக​னங்​களுக்கு அதிக அபராதம், வாகன உரிமை​யாளர்​களுக்​கு, 5 ஆண்டு வரை சிறைத்​தண்​டனை கிடைக்​கும் என, அரசு எச்​சரித்​துள்​ளது. ஆனால் இந்த சட்​டங்​களை சரி​யாக செயல்​படுத்​து​வ​தில்​லை.

மேலும், சரக்கு வாக​னங்​களில் பதிவுச் சான்​றின்​படி அனு​ம​திக்​கப்​பட்ட எடையை விட கூடு​தலாக பாரம் ஏற்றி இயக்​கும் வாகன உரிமை​யாளர்​கள் மீது, 1988-ம் வருடத்​திய மோட்​டார் வாக​னச் சட்ட பிரிவு - 194-ன் படி, அதிக பாரம் ஏற்​றியதற்கு ரூ.20,000/- அபராத​மும், கூடு​தலாக வாக​னத்​தில் ஏற்​றப்​படும் ஒவ்​வொரு டன்​னுக்​கும் ரூ.2000-/ வீதம் அபராதம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இது ஏட்​டள​வில் மட்​டுமே உள்​ளது.

குறிப்​பாக தாம்​பரத்​தி​லும், செங்​கல்​பட்டு பகு​தி​களி​லும் ஏராள​மான கல்​கு​வாரி​கள், கிரஷர்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றி​லிருந்து கற்​கள், ஜல்​லி, எம்​.​சாண்ட் போன்ற பொருட்​களை ஏற்றிச் செல்​லும் லாரி​கள் அதிக பாரத்​துடன் செல்​கின்​றன.

இதனை தாம்​பரம், செங்​கல்​பட்டு வட்​டார போக்​கு​வரத்து ஆய்​வாளர்​கள் கண்​டு​கொள்​வதே இல்​லை. காரணம் அவர்​களுக்கு மாதம் ஒரு குறிப்​பிட்ட தொகை வழங்​கப்​படு​கிறது. இதனால் அவர்​கள் கண்டு கொள்​வதே இல்​லை.

ஆய்​வு​கள் செய்​கிறோம் என்ற போர்​வை​யில் ஒரு வாக​னம் வைத்​திருக்​கும் உரிமை​யாளர்​களுக்கு மட்​டும் அபாரதம் விதிக்​கப்​படு​கிறது. அதிக வாக​னங்​களை வைத்​துள்ள பெரிய நிறு​வனங்​கள் மற்​றும் முதலா​ளி​களிடம் ஒவ்​வோரு மாதம் மாமுல் பெற்​றுக் கொண்டு நடவடிக்கை எடுப்​ப​தில்​லை.

காவல்​துறை அதி​காரி​களும், வட்​டாரப் போக்​கு​வரத்து ஆய்​வாளர்​களும் இது​போல செயல்​படு​வ​தால் அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படுத்​தி, தங்​களின் வரு​வாயை மட்​டும் அவர்​கள் பெருக்​கிக் கொள்​கின்​றனர்.

கூடு​தல் பாரத்​துட​னும், அதிவேக​மாக​வும் இவ்​வாக​னங்​கள் இயக்​கப்​படு​வதை தடுக்க வட்​டார போக்​கு​வரத்து அதி​காரி​கள் முறை​யாக வாகன தணிக்கை செய்​து நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இதற்​கு அரசு உரிய உத்​தர​வு​களை பிறப்​பிக்​க வேண்​டுமென வாக​ன ஓட்​டிகள்​ எதிர்​பார்க்​கின்​றனர்​, என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x