Published : 01 Aug 2025 06:39 AM
Last Updated : 01 Aug 2025 06:39 AM

அன்புமணி நடைபயணத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ராமதாஸ் விமர்சனம்

விழுப்புரம்: அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார்.

விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாமக​வின் வேர் தைலாபுரத்​தில் மட்​டும்​தான் இருக்​கிறது. கட்​சிக்கு நிறு​வனர்​-தலை​வர் இரண்​டும் நான்​தான். பாமக தலை​வர் என்று வேறுயாரையும் (அன்​புமணி) குறிப்​பிடக் கூடாது. தலை​மைக்​கும், தலை​வருக்​கும் கட்​டுப்​ப​டா​மல் யாத்​திரை செல்​வ​தால் துளி​யும் பயனில்​லை. தொண்​டரும், மக்​களும் அன்​புமணி​யின் நடைபயணத்தை ஏற்க மாட்​டார்​கள்.

இது தொடர்​பாக காவல் துறை மற்​றும் உள்​துறை தலை​மைக்கு முறைப்​படி புகார் கொடுத்​துள்​ளோம். எனது கட்​டளையை மீறி நடைபயணம் செல்​லும் அன்​புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்​பது தேவையற்​றது. எனது வீட்​டில் வைக்​கப்​பட்ட ஒட்​டு​கேட்​புக் கருவி கிளியனூர் காவல் நிலைய ஆய்​வாளரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இந்​திய அளவில் திறமை​யான தமிழக சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​னால், 2 நாட்​களில் கரு​வியை வைத்​தவரைக் கண்​டு​பிடித்​து​விடலாம். இது தொடர்​பாக சைபர் க்ரைம் மற்​றும் காவல் துறை மூல​மாக எந்த பதி​லும் தெரிவிக்​க​வில்​லை. தேர்​தல் நெருங்​கு​வ​தால் தமிழகத்​துக்கு பிரதமர் மோடி அடிக்​கடி வந்து செல்​கிறார். ராஜ​ராஜ சோழன், ராஜேந்​திர சோழனுக்கு சிலை வைக்​கப்​படும் என்ற பிரதமர் மோடி​யின் அறி​விப்பை வரவேற்​கிறோம். இவ்​வாறு ராம​தாஸ்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x