Published : 01 Aug 2025 05:42 AM
Last Updated : 01 Aug 2025 05:42 AM

அரசு பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். சென்னை மாவட்ட அளவி​லான கற்​றல் அடைவுத் தேர்வு (ஸ்​லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் புரசை​வாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதற்கு தலைமை வகித்து பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 16-வது மாவட்​ட​மாக தற்​போது சென்​னை​யில் உள்ள தலைமை ஆசிரியர்​களை சந்​தித்து கருத்​துகளை கேட்​டுள்​ளேன். நமது மாநிலத்​தில் மற்ற மாவட்டங்களில் தனி​யார் பள்​ளி​களின் எண்​ணிக்கை குறை​வாகும்.

ஆனால், சென்​னை​யில் தனி​யார் பள்​ளி​கள் அதி​கம். கடன் வாங்​கி​யா​வது தங்​கள் பிள்​ளை​களை தனி​யார் பள்​ளி​யில் சேர்த்துவிடலாம் என்ற எண்​ணம் சென்​னை​யில் வசிக்​கும் பெற்​றோரிடம் உள்​ளது. தனி​யார் பள்​ளிக்கு சென்​றது போக மீத​முள்ளவர்கள் தான் அரசுப் பள்​ளி​களைத் தேடி வரு​கின்​றனர். அதைப் புரிந்து கொண்டு அவர்​களுக்​கான கல்​வியை வழங்க வேண்டும்.

தமிழகத்​தில் உள்ள பள்​ளி​களில் பல்​வேறு புதிய தொழில்​நுட்​பங்​கள் கொண்​டு​வரப்​படு​கின்​றன. பள்​ளி​யில் பாடங்​களை மட்டுமின்றி வாழ்க்​கைக்​கான அறத்​தை​யும் ஆசிரியர்​கள் சொல்​லிக் கொடுக்க வேண்​டும். அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரம் மிகவும் முக்​கி​யம். அவற்றை தொடர்ந்து மேம்​படுத்த வேண்​டும். அரசுப் பள்​ளி​களில் 4 லட்​சம் மாணவர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளதற்கு முதல்​வர் ஸ்டா​லின் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x