Published : 01 Aug 2025 05:30 AM
Last Updated : 01 Aug 2025 05:30 AM

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக? - முதல்வருடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

சென்னை முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அந்​தக் கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் வழங்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது.

ஆனால், கூட்​டணி ஒப்​பந்​தத்​தின்​படி தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை இடத்தை அதி​முக வழங்​க​வில்​லை. மாறாக அடுத்​தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக அறி​வித்​தது. இதனால் தேமு​திக தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதைத்​தொடர்ந்​து, கூட்​டணி நிலைப்​பாட்டை ஜனவரி​யில் அறி​விப்​போம் என்று தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் அறி​வித்​தார். இதன்​மூலம் அதி​முக கூட்​ட​ணி​யில் நீடிக்​க​வில்லை என்​பதை தேமு​திக சூசக​மாக தெரி​வித்​தது.

அதன்​பின் திமுக, தவெக கட்​சிகளு​டன் தேமு​திக தரப்​பில் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளியாகின. இந்​நிலை​யில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்டா​லினை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பிரேமலதா விஜய​காந்த் நேற்று சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அப்​போது துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்​டோர் உடனிருந்தனர்.

திமுக​வுடன் கூட்​ட​ணி? - பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: எனது திரு​மணம் கருணாநிதி தலை​மை​யில்​தான் நடை​பெற்​றது. விஜய​காந்​துக்​கும், கருணாநி​திக்​கும் 45 ஆண்​டு​கால நட்பு இருந்​தது. அதே​போல், முதல்​வர் மு.க. ஸ்​டா​லினும், விஜய​காந்​துடன் நட்​பில் இருந்​தார். விஜய​காந்​துக்கு உடல்​நிலை சரி​யில்​லாத நேரத்​தில் நலம் விசா​ரித்​தார். தற்​போது அவருக்கு உடல்​நிலை சரி​யில்லை என்​ப​தால் நட்​புரீ​தி​யாக சந்​தித்து நலம் விசா​ரித்​தோம். நன்​றாக இருப்​ப​தாக கூறி​னார். விரை​வில் குணமடைய வேண்​டுமென அவருக்கு வாழ்த்து கூறி​விட்டு வந்​தோம்.

இந்த சந்​திப்பு 100 சதவீதம் மரி​யாதை நிமித்​த​மானது. அவர்​கள் எங்​கள் குடும்​பத்​தின் மீது வைத்த பற்​றும், நாங்​கள் அவர்​கள் குடும்​பத்​தின் மீது வைத்​துள்ள பற்​றின் வெளிப்​பாடு​தான் இந்த சந்​திப்​பு. தேமு​தி​க​வின் வளர்ச்​சி​யில் நாங்​கள் தற்​போது முழு கவனத்தை செலுத்தி வரு​கிறோம். தமிழகம் முழு​வதும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறேன். கூட்டணி குறித்து தற்​போது எது​வும் சொல்ல முடி​யாது. அதற்​கான நேரம் வரும் ​போது உங்​களிடம் அறி​விப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்னோட்டமாக சந்திப்பு... இதற்​கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், திமுக கூட்​ட​ணி​யில் சேர தேமு​திக முயற்​சித்து வருவதாக​வும், அதற்கு முன்​னோட்​ட​மாக முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து தங்​கள் விருப்​பத்தை பிரேமலதா விஜய​காந்த் தெரிவித்தாக​வும், அதற்கு முதல்​வர் ஸ்டா​லின் பச்​சைக்​கொடி காட்​டி​யுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. இரட்டை இலக்​கத்​தில் சட்​டப்​பேரவை இடங்​கள் மற்​றும் ஒரு மாநிலங்​களவை இடம் ஒதுக்க தேமு​திக கோரிக்கை வைத்​துள்​ள​தாக​வும்​ அரசி​யல்​ வட்டாரங்களில்​ பேசப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x