Published : 01 Aug 2025 04:01 AM
Last Updated : 01 Aug 2025 04:01 AM

தமிழகத்தில் டெல்டா உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.1) ஓரிரு இடங்களிலும், ஆக. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழகத்​தில் நாளை (ஆக. 2) டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகபட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை மற்​றும் கடலூர், விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. வரும் 3-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் புதுக்​கோட்​டை, கடலூர், விழுப்​புரம், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 4-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், பெரம்​பலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 5-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம் மாவட்​டங்​களி​லும், 6-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை
தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நீல​கிரி மாவட்​டம் நடு​வட்​டத்​தில் 3 செ.மீ., கிளன்​மார்​கன், தேவாலா, செரு​முள்​ளி, பார்​வூட், வூட் பிரையர் எஸ்​டேட், சென்னை மேட​வாக்​கம், பள்​ளிக்​கரணை, கோவை மாவட்​டம் சோலை​யாறு, சின்​னக்​கல்​லாறு, சின்​கோனா ஆகிய இடங்​களில் ஒரு செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x