Published : 29 Jul 2025 05:14 AM
Last Updated : 29 Jul 2025 05:14 AM

தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை ஓயமாட்டேன்: பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: தமிழக மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்​கும் வரை ஓயமாட்​டேன் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரிவித்​தார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: 'மக்​களைக் காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்' என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்​சம் மக்​களை நேரடி​யாக சந்​தித்​திருக்​கிறேன்.

அவர்​களைப் பார்த்​து, அவர்​களின் குறை​களைக் கேட்​டு, அவர்​களின் மனநிலையை அறிந்​தேன். பொது​மக்​கள் அனை​வருமே ஸ்டா​லினின் மக்​கள் விரோத ஆட்​சி​யில், அவர்​கள் சந்​தித்து வரும் வேதனை​களை எடுத்​துரைத்​தனர்.

இந்த ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகளுக்​குப் பாது​காப்​பில்​லை. பாலியல் வன்​கொடுமை​கள் அதி​கரித்​துக்​கொண்டே போகிறது. இந்த ஆட்​சிக்கு குற்​றங்​களை கட்​டுப்​படுத்​தத் தெரிய​வில்​லை. மக்​களே மக்​களை பாது​காத்​துக் கொள்​ளும் அவல​மான ஆட்சி நடக்​கிறது.

காவல்​துறை​யினருக்கே பாது​காப்​பில்​லை. திமுக ஆட்​சி​யின்​மீது வெறுப்​பிலும், கடும் கோபத்​தி​லும் உள்​ளனர். அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வர வேண்​டும். இந்த மோச​மான தீய ஆட்​சிக்கு முடிவு​கட்டி நல்​லாட்​சி​யைத் தர வேண்​டும் என என்​னைச் சந்​தித்த அனை​வரும் கேட்​டுக்​கொண்​டனர்.

தாலிக்​குத் தங்​கம் திட்​டத்தை தாய்​மார்​களும், பெண்​களும், அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் மீண்​டும் செயல்​படுத்​தக் கேட்​டுக்​கொண்​டனர். அதனுடன் பட்​டுச் சேலை வழங்​கப்​படும் என்ற மங்​களகர​மான அறி​விப்​பை​யும் வெளி​யிட்​டேன்.
மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தை, ஆட்​சி​யின் பாதிக் காலத்தை தாண்​டிய பிறகு கொடுத்​தாக தாய்​மார்​கள் கோபத்​துடன் கூறு​வதை எனது பயணத்​தில் கண்​டேன். அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் தொகை அதி​கரிக்​கப்​படும் என்ற அறி​விப்​பால் தாய்மார்கள் அகம் மகிழ்ந்​தனர்.

அதி​முக சார்​பில் 'தி​முக​வின் உருட்​டு​களும் திருட்​டு​களும், உண்​மைக்​காக உரிமைக்​காக' என்ற புதிய பிரச்​சார திட்​டத்தை தொடங்கி இருக்​கிறோம். திமுக ஆட்​சி​யின் அவலங்​களை ரிப்​போர்ட் கார்​டாக மக்​கள் பூர்த்தி செய்து வழங்க உள்​ளனர். திமுக ஆட்​சி​யின் பொய்​யான வாக்​குறு​தி​களை​யும், திறனற்ற ஆட்​சி​யை​யும் கண்​டு, தமிழக மக்​களின் உள்​ளம் திமுகவை வீட்​டுக்கு அனுப்ப ஒன்​று​பட்​டு​விட்​டது.

அதற்​கான நாட்​களை​யும் எண்​ணிக் கொண்​டிருக்​கின்​றார்​கள். வானளா​விய வெற்​றி​பெற்ற எனது எழுச்​சிப் பயணம் தொடரும். தமிழக மக்​களுக்கு நிம்​ம​தி​யான நல்​லாட்​சியை வழங்​கும்​வரை நான் ஓயப்​போவ​தில்​லை. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x