Published : 26 Jul 2025 04:52 AM
Last Updated : 26 Jul 2025 04:52 AM

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு தில்லுமுல்லு: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது ஒரு தில்​லு​முல்லு நடவடிக்கை என்​றும் மக்​களாட்சி மக்​களுக்கே உரியது; அதையாரும் களவாட அனு​ம​திக்க மாட்​டோம் என்​றும் முதல்​வர் ஸ்​டா​லின் கருத்து தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​கள் தொடங்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​தால், பல்​வேறு அரசி​யல் கட்சிகளும் தேர்​தல் ஆணை​யத்​திடம் அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை நடத்த வேண்​டும் என்​றும் ஆதாரை ஆவண​மாக கருதவேண்​டும் என்​றும் கோரிக்கை விடுத்து வரு​கின்​றன. இதற்​கிடை​யில் பிஹாரில் பல லட்​சம் வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இந்​நிலை​யில் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​பதிவு: சிறப்​புத் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது சத்தமே இல்​லாமல் பின்​தங்​கிய மற்​றும் தங்​களுக்கு எதி​ரான பிரி​வினரை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கி, தேர்​தலில் பாஜகவுக்கு சாதக​மான சூழலை உரு​வாக்​கும் செய​லாகும். இது சீர்​திருத்​தம் அல்ல; தேர்​தல் முடிவு​களைத் திட்​ட​மிட்​டபடி வடிவமைக்​கும் தில்​லு​முல்லு நடவடிக்​கை.

பிஹார் மாநிலத்​தில் நடந்​ததே அனைத்​தை​யும் வெட்​ட​வெளிச்​ச​மாக்​கி​விட்​டது. முன்பு தங்​களுக்கு வாக்​களித்த அதே மக்​களே கூட இம்​முறை நம்மை வீட்​டுக்கு அனுப்​பி​விடு​வார்​கள் என்​பதை டெல்லி அணி நன்கு உணர்ந்​துள்​ளது. அதனால்​தான், அவர்​கள் வாக்​களிக்​கவே கூடாது எனத் தடுக்​கப் பார்க்​கிறது.

எங்​களைத் தோற்​கடிக்க முடி​யாது என்ற சூழல் எழுந்​ததால் எங்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்தே நீக்​கப் பார்க்​கிறீர்கள். நெருப்​புடன் விளை​யா​டாதீர்​கள். மக்​களாட்​சிக்கு எந்த வடி​வில் அச்​சுறுத்​தல் நேர்ந்​தா​லும் அதனை உறு​தி​யாக நின்று எதிர்ப்போம்.

முழு ஆற்​றலுடன் தமிழகம் தனது குரலை உரக்க எழுப்​பும். இந்த அநீ​திக்கு எதி​ராக ஜனநாயகரீ​தி​யான அத்​தனை ஆயுதங்களையும் நாங்​கள் அறவழி​யில் பயன்​படுத்​து​வோம். அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​பால் நம்​பிக்கை கொண்​டுள்ள குடிமக்கள் அனை​வருக்​கும் சொல்​லிக்​கொள்​வது என்​னவென்​றால், சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது ஒரு மாநிலத்​தோடு தொடர்​புடையது மட்​டுமல்ல, நமது குடியரசின் அடித்​தளம் தொடர்​பானது. மக்​களாட்சி மக்​களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனு​ம​திக்க மாட்​டோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x